ஆத்தீகம் நாத்தீகம்
நாத்தீகனும் ஆத்தீகனே ********************* கட்டுரை எண் 1548 ************ அறிவியலை அல்லது இயற்கையை கடவுளாக ஏற்றுக்கொண்டவனுக்கு புதிய கடவுள் தேவைப்படாது காரணம் கடவுளை ஆத்தீகர்கள் சர்வ பலம் பெற்றவராக நம்புவதை போலவே நாத்தீகர்களும் இயற்கை நம்பிக்கையாளர்களும் அறிவியலை நம்புகின்றனர் அறிவியல் துணையால் எதையும் சாதிக்க முடியும் இயற்கையே அனைத்தையும் படைத்தது படைத்துக்கொண்டுள்ளது இயற்கையே அனைத்தையும் அழித்தது இனியும் அழிக்கும் இயற்கையை மீறி மனிதனால் எதுவும் செய்ய இயலாது இதுவே கடவுள் மறுப்பாளர்களின் வாதமாகவும் உள்ளது இந்த நம்பிக்கையுள்ள நாத்தீகர்களுக்கும் கடவுளை நம்பும் ஆத்தீகர்களுக்கும் இடையில் என்ன வேறுபாடு உள்ளது ? கடவுளை மாற்றிக்கொண்டார்களே தவிர கடவுளை இவ்விரு சாராரும் மறுக்கவில்லை வானை படைத்தது யார் ? கடவுள் பூமியை படைத்தது யார் ...