Posts

Showing posts with the label தீயவன்

தீயவனை எச்சரிக்கும் நபிமொழி

     தீயவனை  எச்சரிக்கும் நபிமொழி               ************************ பொறாமையும் பகைமையும் ஈமான் கொண்ட இறைநம்பிக்கையாளனையும்  மிக விரைவில்  தீயவனாக சூழ்ச்சியாளனாக  வரம்பு மீறும் அயோக்கியனாக மாற்றிவிடும்  அவன் வாழ்வில் சேகரித்து வைத்துள்ள நன்மைகளை கரிக்கட்டையாக மாற்றி விடும்  துஷ்டனை கண்டால் தூர விலகிவிடு என்ற சொல்லுக்கு உரித்தானவனாக ஆக்கி விடும்  கடமைக்கு புன்னகைப்பவர்களையும் கூட  மனவெறுத்து திசை திருப்பி செல்ல வைத்து விடும் எவருடைய தீயகுணத்தை கண்டு பிற மனிதன் விலகி செல்கிறானோ அவனே மறுமை நாளில்  மனிதனில் மிகவும் கெட்டவன் என்ற நபிமொழி கருத்துக்கு இவர்களே  சொந்தமானவர்கள்          நட்புடன்  J . யாஸீன் இம்தாதி                            20-9-2025