அவ்லியா தொடர் பாகம் நான்கு
மகான்களை மட்டப்படுத்தும் ஞானசூனியங்கள் ***************************** பாகம் நான்கு. கட்டுரை எண் 1544 ***************** இறை வசனங்களையும் இறைத்தூதர் போதனைகளையும் வாழ்நாளில் இயன்றவரை கடைபிடிப்பவர்களே மகான்கள் மனிதன் என்ற முறையில் இயல்பாக ஏற்படும் தவறுகளில் இருந்தும் கூட அதிகமான முன்னெச்சரிக்கையை பின்பற்றுபவர்களே மகான்கள் அத்தகையவர்கள் பெயரால் தர்ஹாக்களை உருவாக்கி வைத்து கொண்டு அவர்களின் சன்னதியில் தர்ஹா வியாபாரிகள் அரங்கேற்றம் செய்யும் ஒவ்வொரு அம்சங்களையும் இஸ்லாத்துடன் உரசினால் மகான்களை உண்மையில் இழிவுபடுத்தி மட்டப்படுத்தக்கூடியவர்கள் தர்ஹா நிர்வாகிகளும் மகான்களின் துதி பாடுவதையே இஸ்லாமாக கருதும் கூட்டத்தவர்களுமே ஆவர் செய்திகளை வாசிக்கும் தொலைக்காட்சிகள் ஊடகங்கள் யாவும் தர்ஹா பக்தர்கள் என்றும் தர்ஹா வழிபாடு துவங்கியது என்றும் அறிக்கை வாசிக...