Posts

Showing posts with the label வழிகேடு

சவுதி இளவரசர் சல்மான்

   வழிகேடுகளின் வாசல் திறக்கும்                    சவுதி இளவரசரும்  திசைமாற்றும் அழைப்பாளர்களும்               **************************                கட்டுரை எண் 1575                    **************** வழிகேடுகளின் பிறப்பிடமாக திகழ்ந்த அரபுலகத்தை செவ்வைப்படுத்தி  அறியாமையில்  ஊறிப்போன மக்களை சீர்படுத்தி  அழகிய கட்டுப்பாடுகளை விதித்து  நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுத்து  அரபுலகை இஸ்லாமிய நாடாக உருவாக்கியதில் இறைத்தூதர் நபி  (ஸல்) அவர்களின் ஒப்பற்ற தியாகமும் நபித்தோழர்களின் தியாகங்களுமே  முதன்மையானது  உலகமே அரபுநாடுகளை போன்ற (குர்ஆனிய) அரசியல் சட்டங்களே மனித வாழ்வுக்கு ஏற்றது என்று அவர்களையும் அறியாது  ஒப்புக்கொண்டு வரும் இச்சூழலில் பரம்பரை ரீதியாக அரபுலகில்  ஆட்சிக்கு வந்த சிலர்களால் அரபுலகத்தின் புனிதத்துவம் சிதிலமடைந்து வருகிறது  அந்த கலக்கத்தை...

அறிவீனர்களின் கதறல்களும் ஒப்பாரிகளும்

     அறிவீனர்களின் கதறல்களும்                      ஒப்பாரிகளும்             *****************************                கட்டுரை எண் 1548                     ***************** முறையான இறைநம்பிக்கை குடியிருக்கும் முஸ்லிமால் மட்டுமே ஒரு தவறை தவறு என்று முழு மனதுடன் ஏற்க முடியும்  முறையான இறைநம்பிக்கை இல்லாத எவராலும் ஒரு தவறை சிறு தவறாக சித்தரிக்கவும் முடியும் தவறே இல்லை என்று மடமையாக  மறுத்து மனமுரண்டாக வாதிக்கவும்  இயலும் இஸ்லாத்தை விமர்சிக்கும் எவரும்  இதுவரை அறிவுப்பூர்வமாகவோ அல்லது இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்றோ ஆதாரங்களுடன் உரியவர்களிடம் நிரூபித்ததும் இல்லை சவால்களை ஏற்றுக்கொண்டதும் இல்லை  முஸ்லிம் பெயர்தாங்கிகள் செய்யும்  அறிவீன செயல்களையும் வரம்பு மீறி நடக்கும் அவலங்களை மட்டுமே இஸ்லாமிய கருத்தாக அவர்களால் வஞ்சகமாக  சித்தரிக்க முடியும்...

இக்காலமும் முற்காலமும்

            முற்காலம் இக்காலம்                   ***************                    கட்டுரை 1516                        ********* வழிகேடுகளில் மூழ்கும் வரை பகுத்தறிவின் அறிவுரையை  மனிதனின் மனம் ஏற்காது  வழிகேடுகளில் மூழ்கிய பிறகு  மனதின் மாற்றத்தை மனிதனின் இயல்பு ஏற்காது  மதுபானம் தீங்கானது என்று மதுஅருந்தும் அனைவரும் அறிந்ததே அதில் இருந்து விடுபடவும் அவர்களின்  மனம் விரும்பும் ஆனால் அதற்கு பழக்கப்பட்ட இயல்பு ஒத்துழைக்காது எந்த வழிகேடுகளும் துவக்கத்தில்  உறுத்தலை ஏற்படுத்தும் துவக்கத்தில் மனம் விரும்பினாலும் உடலியில் இயற்கை குணம் அதை ஏற்காது வாந்தி உமட்டல் போன்ற உடலியல்  இயலாமை அவைகளுக்கு உவமையே உறுத்தல் ஏற்படும் நிமிடமே  தன்னை தற்காத்து கொள்பவன் வாழ்வில்   ஜெயம் பெறுவான்  உறுத்தலை உதறி தள்ளுபவன் அதன் பின் சரிவையே வாழ்வில் சந்திப்பான் வாசலை திறக்கும் ...

முதல் கோணல்

                     முதல் கோணல்                           •••••••••••                   கட்டுரை எண் 1438                   J . YASEEN IMTHADHI                        ************** உணவுக்கு பதிலாக மண்  அல்லது பழக்கம் இல்லாத உணவை மனிதன்  வாயில் போட்டால் நாவு அதை ஏற்காது  குடிநீருக்கு பதிலாக கழிவு நீரை குடிக்க முற்பட்டால் நாவு அதை தடுத்து விடும் காரணம் இயற்கைக்கு எதிராக மனித இயல்புக்கு எதிராக எதை செய்தாலும் அதை துவக்கத்தில் வெறுக்கும் விதமாக தான் இறைவன் மனித உடல் அமைப்பை படைத்துள்ளான் இதுவும் இறைவனின் மாபெறும் அருட் கொடைகளில் ஒன்று  இந்த அருட்கொடையை உணராது மனிதனின் உடலும் மனமும் வெறுக்கும் செயல்களை  செய்து தன்னை  அடிமைபடுத்தி கொண்டவன் அதில் இருந்து மீளுவது வாழ்வில் மிகவும் சிரமம்  போதை பொ...

வழிகேடுகளை விரும்பும் சமூகம்

   வழிகேடுகளை விரும்பும்                    சமுதாயம்               ♦♦♦♦♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI             கட்டுரை எண் 1426                       14-11-2021                          ******* அரும்பு மீசை முளைக்காத சிறுவனின் உணர்வுகளை கூட தோண்டி எடுக்கும் அளவு ஆபாச காட்சிகளும் சமூகவலைதளத்தில் குடும்ப பெண்களின் குத்தாட்ட காட்சிகளும் அருவெறுப்பான செய்முறைகளும் எடுத்து கூறவே தயங்கும் கீழ்நடை பேச்சுக்களும் விபச்சார அழைப்புகளும் கட்டுப்பாடுகளே இல்லாது  பெருகி விட்ட நிலையில்  பாலியல் கொடுமைகளை  பற்றி மட்டும் பேசி கொண்டிருப்பது முட்டாள்தனமான காரியமாகும் ஆசிரியர் மாணவியிடம் தவறாக பேசுவதும் நடப்பதும் மாணவர்கள் ஆசிரியைகளிடம் தவறாக நடப்பதும் கிழவன் சிறுமியை கற்பழிப்பதும் ஆச்சரியமான விசயம் அல்ல...