இக்காலமும் முற்காலமும்

            முற்காலம் இக்காலம்
                  ***************
                   கட்டுரை 1516
                       *********

வழிகேடுகளில் மூழ்கும் வரை
பகுத்தறிவின் அறிவுரையை 
மனிதனின் மனம் ஏற்காது 

வழிகேடுகளில் மூழ்கிய பிறகு 
மனதின் மாற்றத்தை மனிதனின் இயல்பு ஏற்காது 

மதுபானம் தீங்கானது என்று மதுஅருந்தும் அனைவரும் அறிந்ததே
அதில் இருந்து விடுபடவும் அவர்களின் 
மனம் விரும்பும்
ஆனால் அதற்கு பழக்கப்பட்ட இயல்பு ஒத்துழைக்காது

எந்த வழிகேடுகளும் துவக்கத்தில் 
உறுத்தலை ஏற்படுத்தும்

துவக்கத்தில் மனம் விரும்பினாலும் உடலியில் இயற்கை குணம் அதை ஏற்காது

வாந்தி உமட்டல் போன்ற உடலியல்  இயலாமை அவைகளுக்கு உவமையே



உறுத்தல் ஏற்படும் நிமிடமே 
தன்னை தற்காத்து கொள்பவன் வாழ்வில்  
ஜெயம் பெறுவான் 

உறுத்தலை உதறி தள்ளுபவன்
அதன் பின் சரிவையே வாழ்வில் சந்திப்பான்

வாசலை திறக்கும் வரையே கட்டுப்பாடுகள் கைகொடுக்கும்

வாசலை திறந்த பின் கட்டுப்பபாடுகள் சிதிலமடையும் 



திட்டமிட்டு வழிகேடுகளில் ஈடுபடுபவர்களை விட 
சூழல்களில் சிக்கி சேதாரம் அடைபவர்களே வாழ்வில் மிக அதிகம் 

தற்போதைய ஆன்லைன் உலகம்
அதில் முன்னனி வகிக்கிறது 

இருபது வருடங்களுக்கு முன் 
நீண்ட நாட்கள் மிகவும் சிரமப்பட்டு தந்திரம் செய்து ஒரு வாலிபன்  அடைந்த வழிகேடுகளை 

ஐந்தே நிமிடத்தில் தற்போது ஆன்லைன் உலகில் ஒரு சிறுவனும் சிறுமியும் எளிதாக அடைந்து விட முடியும் 

இந்த வேறுபாடுகளை 
தற்கால இளையதலைமுறை அறியும் வாய்ப்பு இல்லை 

காரணம் இக்காலம் போலவே முற்காலமும் இருந்திருக்கும் என்ற எண்ணமே இளையதலைமுறையிடம் வழிகேடுகளை  பரவலாக்குகிறது

காரணம் அவர்கள் கண் முன் காணும் 
தற்கால உலகம் வேறு 

இருபது வருடங்களுக்கு முன்னிருந்த உலகம் வேறு  

1 Gp மெமரி கார்ட் பத்து வருடங்களுக்கு முன் இரணேடாயிரம்  ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது

தற்போது ஒரு கிலோ மெமரி கார்ட் 
நூறு ரூபாய் விலையில் கிடைக்கும் மலிவை  
சந்தித்து விட்டது 

அவைகளில் நிரப்பப்பட்டுள்ள பெரும்பாலான தகவல்கள் நிச்சயம் வழிகேடுகளின் கிடங்காகவே நிறைந்திருக்கும் 


மனிதனின் எதிர்காலத்திற்கு கைகொடுக்கும் தங்கத்தின் இடத்தின் விலை மலையேறிவிட்டது 

மனிதனை சீரழிக்கும் நவீன சாதனங்களின் 
விலை தரை தொட்டு விட்டது 


மனிதனை சீரழிக்கும் ஆபாச காட்சிகளும் ஒழுக்க கேடுகளும் சகஜமாகி விட்டது 


பாவைகளின் நாணம் கழிவறையில் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது


கிழவிகளும் குமரிகளை போல் சாயம் பூசி வேடம் அணிந்து  பொது இடங்களில் சுதந்திரமாக நடமாடும் கோலம் பெருகி விட்டது 

தாய்மைக்கும் தாரத்திற்கும் வேறுபாடு இன்றி சந்ததிகளின் பார்வை தரம் இழந்து விட்டது 

கள்ளக்காதல் குற்றம் இல்லை
ஒரினச்சேர்க்கை குற்றம் இல்லை
என்று கீழ்த்தரமான எண்ணம்  சட்டமாக இயற்றப்பட்டு விட்டது

அந்தளவுக்கு நீதிமான்களின் பகுத்தறிவு சிதிலமடைந்து விட்டது 

இனி வருங்காலம் 
மனநோய் பிடித்தவர்களாக 
உனது சந்ததி நிச்சயம் மாறும் 

வாழ வேண்டிய வயதில்
சாவை எதிர்நோக்கும் அறிவீனர்களாகவே
நிச்சயம் உன் சந்ததி மாற்றப்படும் 


ஆன்லைன் உலகம் 
முன்னேற்றத்தை மட்டும் தரவில்லை
அதை விட பல மடங்கு பின்னேற்றத்தை தந்து விட்டது


يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ کَآفَّةً  وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏

நம்பிக்கை கொண்டவர்களே 
நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்
நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்

(அல்குர்ஆன் : 2:208)



      நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                          26-4-2024


Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை