படிப்பறிவும் பகுத்தறிவும்
பகுத்தறிவும் படிப்பறிவும் ******************* கட்டுரை எண் 1510 ************ படித்தவனாக இருந்தால் இப்படி செய்வாயா ? படித்தவனாக இருந்தால் இப்படி பேசுவாயா ? படித்தவனாக இருந்தால் கண்ணியம் இழந்து நடப்பாயா ? என்றெல்லாம் அறியாமையால் தவறுகளை செய்யும் பாமரர்களை பார்த்து இது போன்ற எதிர்கேள்விகளை கடந்த காலங்களில் வழமையாக படித்தவர்கள் தற்பெருமையுடன் கேட்டுக்கொண்டிருப்பார்கள் காரணம் படிப்பறிவே மனிதனை பக்குவப்படுத்தும் படிப்பறிவே மனிதனை பண்படுத்தும் என்பதே அதன் பின்னனியாகும் அறியாமையில் தவறை செய்யும் பாமரனுக்கு இக்கேள்விக்கான பதிலை துணிச்சலுடன் அச்சூழலில் சொல்ல இயலாது காரணம் தவறு செய்பவன் அந்நிலையில் சமாதானத்திற்கு எதை சொன்னாலும் மக்களிடம் எடுபடாது உண்மையில் படிப்பறிவுக்கும் அழகிய...