Posts

Showing posts with the label உபதேசம்

சிறந்த தந்தை

            சிறந்த தந்தை யார்  ?                   ****************** தனது சிரமத்தை தனது சந்ததிகளும்  சுமந்து விடக்கூடாது என்று ஆசைப்படுவது தகப்பனின் குற்றம் இல்லை  ஆனால்  சிரமம் என்றால் என்ன சிக்கல் என்றால் என்ன பொறுமை  என்றால் என்ன வீரம் என்றால் என்ன விவேகம் என்றால் என்ன  மன வலிமை என்றால் என்ன என்பதை நேரடியாகவோ  அல்லது தனது நடவடிக்கை மூலமாகவோ சந்நததிகளுக்கு கற்றுக்கொடுக்காது இருப்பதே தகப்பனாரின் குற்றம் இவைகளுக்கெல்லாம் ஆணிவேறாக அமைவது முறையான இறைநம்பிக்கை  இறைவனின் விதியில் இல்லாத ஒன்று எதுவும் நடவாது என்ற அஸ்த்திவாரத்தை சந்ததிகளின் உள்ளத்தில் சிறுவயதில் சீராக விதைத்து விட்டாலேஅவர்களின் மன உறுதியை   சரிந்து விட செய்யாது  தந்தை  இறந்து பல வருடம் சென்றாலும்  எனது தந்தையின் முயற்சியே இந்நிலைக்கு காரணம் என்று சந்ததிகள் தனிமையில் சிந்திக்கும் சூழலை உருவாக்கி செல்ல வேண்டும் نِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: كُنْتُ خَلْفَ النَّبِيِّؐ يَوْماً فَقَالَ: يَا غُلاَم...