வாழ்க்கையே அலை போலே
வாழ்க்கையே அலை போலே ***************** அவரை திருமணம் செய்திருந்தால் வாழ்வு சிறப்பாக அமைந்திருக்கும் இவரை திருமணம் செய்ததின் காரணமாகவே வாழ்வு சீரழிந்து விட்டது என்ற கற்பனையே பலரின் குடும்ப வாழ்வை சீரழித்து வருகிறது ஒருவரை திருமணம் செய்யும் முன் பல முறை யோசிக்கலாம் அதற்கு இஸ்லாமும் தடை விதிக்கவில்லை பலரின் அனுபவ பாடத்தை புறம் தள்ளி உபதேசங்களை உதறிதள்ளி விட்டு உணர்ச்சிகளுக்கு மட்டும் இடமளித்து துணையை தேர்வு செய்பவர்கள் நிச்சயம் இந்நிலையை அடைவார்கள் ஒரு மனிதனின் ஆசையும் தேடலும் எப்போதும் தனக்கு சாதகமாகவே கற்பனையில் சிந்திக்க வைக்குமே தவிர தனக்கு பாதமாக சிந்திக்க வைக்க முனைவது இல்லை பாமரன் முதல் படித்தவன் வரை இதை வெல்வது சிரமமானது அதை வென்று விட்டால் எதுவும் வாழ்வில் எளிமையானது தூரத்தில் இருந்து பார்வையில் நிலவின் அழகை ரசிக்கும் மனிதனை நிலவின் தரைப்பகுதியில் இறக்கி விட்டால் அவன் வாழ்ந்த பூமியை நோக்கியே மீண்டும் வர சிந்திப்...