சுபுஹான மவ்லிதும் சலவாத்தும்
சலவாத்தும் சுபுஹான மவ்லிதும் ஒப்பீடு ********************** கட்டுரை எண் 1529 ************ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக அவர்களின் உம்மத்துகள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற ஆழமான பாடத்தை கற்பிப்பது சலவாதின் மூல கருத்தாகும் நபி (ஸல்) அவர்களிடமே தேவைகளை கேட்பதும் பாவங்களை முறையிட்டு மன்னிப்பு கோருவதும் மனிதன் எழுதிய சுபுஹான மவ்லித் என்ற அரபுபாடலின் மூல கருத்துக்களாகும் இறைவனின் வல்லமையை தெளிவாக பறைசாற்றுவது சலவாதாகும் இறைவனின் வல்லமை போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் வல்லமை இருக்கிறது என்ற இணை வைக்கும் மாபாதகத்தை மறைமுகமாக புகுத்துவது சுபுஹான மவ்லிதாகும் ஒரு முறை சலவாத் படித்தாலும் பத்து மடங்கு இறைவன் அருள்புரிகிறான் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உத...