சிந்தனை செய் மனமே
சிந்தனை செய் மனமே ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ J . யாஸீன் இம்தாதி ********* ஊட்டப்பட்ட சிந்தனையை விட பயிற்றுவிக்கப்பட்ட சிந்தனையை விட பகுத்தறிவால் செதுக்கப்படும் ஞானமே சரியான சிந்தனை அடகு வைப்பதற்கு சிந்தனை என்பது மனிதனின் உதிரிப் பொருளும் அல்ல விற்பனை செய்வதற்கு சிந்தனை என்பது வணிகப்பொருளும் அல்ல தீர்வை நோக்கி பயணிக்காதது சிந்தனையும் அல்ல முரண்பாடுகளை ஜீரணிப்பது சிந்தனையும் அல்ல வழங்கப்பட்ட வேதத்தை கூட சிந்தித்து ஏற்க சொல்லும் மார்க்கமே இஸ்லாம் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை என்ற நாகூர் அனீபா பாடலை ரசித்து கொண்டே அருளார்கு அருள் செய்யும் அம்மா கடலோரம் வாழ்கின்ற பீமா என்ற பாடலையும் ரசித்தால் நீ சிந்தனையை செதுக்கவில்லை மாறாக சிந்தனையை கவிதை எனும் கழிவு புதைகுழிக்குள் அடக்கம் செய்திருக்கின்றாய் தாய்மைக்கு நிகர் யாரும் இல்ல...