குழந்தைகள் தினமா
குழந்தைகள் நினைவு தினமா பெற்றோர்கள் வருந்தும் தினமா ********************* J . யாஸீன் (இம்தாதி) -------------------- கட்டுரை எண் 1147 பதிவு 14-11-2022 ******* ஈன்றெடுத்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்கும் தன்மை அனைத்து உயிர்களிடமும் காணப்படும் இயற்கையான குணம் உருவத்தில் பிரமாண்டமான யானை முதல் மனித கண்ணுக்கு தெரியாத கிருமிகள் வரை இந்த தன்மையில் விதி விலக்கு இல்லை பறந்து செல்வதற்கு இயலாத கோழிகள் கூட பருந்துகள் தன் குஞ்சை அபகரிக்க வரும் பொழுது உயர பறந்து ஆக்ரோசமாக விரட்டி அடிக்கும் குஞ்சுகள் பக்குவ வயதை அடையும் வரை சேவலுடன் இணை சேர்வதை தாய்க் கோழிகள் தவிர்க்கும் முட்டையிடுவதை காலம் கடத்தும் காரணம் தன்னால் ஈன்ற குஞ்சுகளை கவனிக்கும்...