Posts

Showing posts from November, 2024

குர்ஆன் சுன்னா

        சிந்தனைக்கு சில வரிகள்              ********************* நம்பிக்கையை  அடகு வைக்கும் மனிதனிடம் யாரையும்  எதிரியாக சித்தரிக்கலாம்  யாரையும் நண்பனாக சித்தரிக்கலாம் சிந்தனையை அடகு வைக்கும் மனிதனிடம் எதையும் புரட்சியாகவும் விதைக்கலாம் எதையும் வறட்சியாகவும் விதைக்கலாம் குர்ஆன் சுன்னாவை அடகு வைக்கும் மனிதனிடம் எதையும் நன்மையாக நம்ப வைக்கலாம் எதையும் தீய வழியாக வெறுப்புணர்வை திணிக்கலாம் சுன்னத்துக்களை பித்அத்தாகவும் பித்அத்துகளை சுன்னத்தாகவும் பலர் கருதுவதற்கு இதுவே காரணம்  குர்ஆன் சுன்னாவை தவிர எந்த சிந்தனையும் வழிகேடு எனும் புதைகுழியில் தள்ளி விடும்  மரணித்தவரின் தலைமாட்டில்  மூடு மந்திரமாக ஓதுவதற்கு வழங்கப்பட்டது அல்ல திருக்குர்ஆன்  உயிருடன் இருப்பவரின் சிந்தனையை செதுக்குவதற்கு வழங்கப்பட்ட வாழ்வியல் நெறியே திருக்குர்ஆன் இதயத்தில் ஒட்டாத திருக்குர்ஆன்  வீட்டின் அலமாரிகளை அலங்கரிப்பதில்  புண்ணியம் இல்லை சுன்னாவை எட்டாத சிந்தனை  மறுமை வெற்றியை அணைக்கப்போவது இல்லை     ...

யார் இவன் ஏன் எதிர்க்கிறான்

      யார் இவன் ஏன் எதிர்க்கிறான்                ******************** யார் இவன் நமக்கும் இவனுக்கும் என்ன தொடர்பு நாம் இவனது தொழிலுக்கும் முன்னேற்றத்திற்கும் இடையூராக செயல்பட்டது இல்லையே  இவனது குடும்பத்திற்கும் இவனை சார்ந்தோருக்கும் எவ்விதமான இடையூரும் செய்தது இல்லையே  அவ்வாறு இருக்க  இவன் எதற்கு நம்மை எதிரி போல் பார்க்கிறான் இவன் எதற்கு நம் தொழிலுக்கும் முன்னேற்றத்திற்கும் எதிராக செயல்படுகிறான் இவன் எதற்கு நம் நட்பு வட்டத்தை சிதைக்க  முயற்சி செய்கிறான் இவன் எதற்கு நம்மை பற்றி அவதூறு பரப்புகிறான் என்று பல கேள்விகளும் மனஉளைச்சல்களும்  பலரின் வாழ்வில் புரியாத புதிராக இருக்கும் வாழும் இடத்தை மாற்றிக்கொள்ளலாமா  செய்யும் தொழிலை தவிர்த்து விடலாமா  நேரடியாக சென்று எதிர்ப்பின் காரணத்தை கேட்கலாமா  என்றும் அடிக்கடி மனதில் பல விரக்தியும் ஏற்படும் இதற்கு காரணம் என்ன  ? ஒரு மனிதன் வன்மம் நிறைந்த எதிரியாக மாறுவதற்கும் மாற்றப்படுவதற்கும் பல காரணங்கள் இருக்கலாம்  உங்களின் பேச்சு  உங்களின் எழுத்...

வார்த்தை அறிவுரைகள்

   வார்த்தைகளால் வடித்த அறிவுரை             *********************** ஐய்யோ என கதறாதே வாழ்வை நினைத்து பதறாதே தன்னிலை மறந்து சிதறாதே தூக்கம் இழந்து உருகாதே வழிகளை தேடு வலிகளை எதிர் கொண்டு ஓடு லட்சியத்தின் ஏணிகளை நாடு சாதித்தவர்களின் சரிதையை பாடு உழைப்பை விதையாக்கு தன்னம்பிக்கையை உரமாக்கு ரத்தமின்றி யுத்தம் இல்லை சப்தமின்றி ஓசை இல்லை  ஞானமின்றி வெற்றி இல்லை முயற்சியின்றி தோல்வி இல்லை  தோல்விக்கும் நீண்ட வாழ்வு இல்லை கவலையின் கண்களை குருடாக்கு துக்கத்தின் கால்களை முடமாக்கு  இறைநம்பிக்கையை தனதாக்கு இஸ்லாமிய போதனைகளை  அதற்கு மூலமாக்கு கடந்த நிமிடங்கள் உனக்கானது அல்ல நிகழும் நிமிடங்கள் பிறருக்கானதும் அல்ல  மடிந்தவைகளை நினைத்தே வருந்தாதே மலரும் விடியலை கைவசம்  தழுவ மறவாதே இதயத்தில் உன் இறைவன் இருக்கும் வரை  இமயத்தை எதிர் நோக்கி  நீ பயணித்தாலும்  உன் மகுடத்தை எவரும்  வீழ்த்த இயலாது  பிரார்த்தனையே உன் பலம் அதுவே உன் வாழ்வின் வளம் وَاَنَّ سَعْيَهٗ سَوْفَ يُرٰى‏  நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்)...

மலகுல் மவ்த்

        நீ காணவிருக்கும் உருவம்                ********************* ஏதோ ஒரு நாள் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு உருவம்  திடீரென  உன் கண் முன்னே அதிரடியாக வந்து நிற்கும் உன்னை சுற்றியுள்ள எவருக்கும் அந்த உருவம் கண்ணுக்கு தெரியாது ஆனால் அந்த உருவத்தை  நீ கண்ட நொடியில் உலகில் வேறு எந்த உருவமும்  உன் கண்ணுக்கு தெரியாது  சுவாசிக்கும் மூச்சு உன்னுள் இருக்கும் ஆனால் இயல்பாக செயல்படும்  எந்த உறுப்புக்களும் உன்னில்  நீ விரும்பினாலும் செயல்படுத்த இயலாது  உன் குரல் அந்நிமிடம் ஊமையாகி விடும் உன் கரமும் கால்களும் செயலற்றுப்போய் விடும்  அந்த உருவத்தின் பெயரே  || மலகுல் மவ்த் || உன்னில் இருக்கும் உயிரை நெய்யில் ஒட்டியுள்ள முடியை போல் எளிதாக உருவி எடுப்பார் நீ நல்லவனாக இருந்தால் உன்னில் இருக்கும் உயிரை  முள்ளில் சிக்கிய சேலை போல் கிழித்து கடுமையாக இழுத்தெடுப்பார் நீ தீயவனாக இருந்தால்  இந்நிலை சந்திக்காது எவரும் உலகை விட்டு பிரியவே முடியாது  இந்நிலையை சந்திக்கும் முன் உன்னை நீ தயார் பட...

இன்ஷா அல்லாஹ்

               இன்ஷா அல்லாஹ்              ஏன் எதற்கு எப்போது                  ******************                 கட்டுரை எண் 1359                      ************* எதிர்காலத்தை மட்டும் யோசித்து திட்டமிடுவதை விட நிகழ்காலத்தை உள்வாங்கி  செயல்படுவதே இறைநம்பிக்கை கொண்ட  முஸ்லிமுக்கு  உவந்த நடவடிக்கையாகும் இன்ஷா அல்லாஹ்  எனும் சொல் உயிருடன் இருக்கும் ஒரு மனிதன்  உயிருடன் இருக்கும் நிலையில் இறைவனும் நாடினால் நாடிய  காரியத்தை செய்வேன் என்று கூறும்  ஆவலின் வாக்குறுதியே தவிர  நாடிய காரியத்தை செய்தே தீருவேன் என்று உத்தரவாதம் தரும் வார்த்தைகள் அல்ல  இன்ஷா அல்லாஹ் என்பது  இன்ஷா அல்லாஹ்  எதிர் வரும் ரமலான் மாதம் முதல்  நான் தொழுவேன் என்று சொல்லுவதை விட  இன்றைய தினம் அடையவிருக்கும் தொழுகைகளை இயன்றவரை நிறைவேற்றுவேன் என்று...

திருமணம் செய்வோர் கவனத்திற்கு

  திருமணம் செய்வோர் கவனத்திற்கு             ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷                    கட்டுரை எண் 1358                    **************** விதவையை  திருமணம் செய்யலாமா ஊனமானவரை  திருமணம் செய்யலாமா வயதில் மூத்தவரை  திருமணம் செய்யலாமா  குடும்ப கட்டுப்பாடு செய்தவரை திருமணம் செய்யலாமா  என்று பல கேள்விகள் முஸ்லிம் சமூகத்தில் உள்ளது  விதவையை திருமணம் செய்வது சிறப்பானதா  ஊனமானவரை திருமணம் செய்வது சிறப்பானதா  கைக்குழந்தையுடன் இருப்பவரை திருமணம் செய்வது சிறப்பானதா  என்றும் பல சந்தேகங்களும் முஸ்லிம்  சமூகத்தி உள்ளது  யாரை திருமணம் செய்வது சிறந்தது என்று இஸ்லாம் விதிமுறைகளை வகுக்கவில்லை மாறாக யாரை திருமணம் செய்வது வாழ்வுக்கு உவந்தது என்றும் மறுமை வெற்றிக்கு சிறந்தது என்றும் உடலியலுக்கு ஏற்றது என்றும்   இஸ்லாம் போதிக்கிறது  யாரை திருமணம் செய்தாலும் அவர் மூலம் ஏற்படவிருக்கும் சங்கடங்கள் சிக்கல்களை சக...

நபிமார்களுக்கும் அனுமதி இல்லை

    நபிமார்களுக்கே அனுமதி இல்லை                 ********************                   கட்டுரை எண் 1537                      ************ இஸ்லாத்தின் கொள்கைகள் சட்டங்கள் விதிவிலக்குகள் யாவுக்கும்  உரிமை வழங்கப்பட்டவர்  மாமனிதர்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே சீர்திருத்தம் எனும் பெயரால்  நன்மை என்ற பெயரால் நபிகளார் காட்டிய வழிமுறைகளுக்கு மாற்றமாகவும் எதிராகவும் முரணாகவும் செயல்படும் அதிகாரம் எவருக்கும் இல்லை  அவர் மகானாக இருப்பினும் ஆய்வு நிறைந்த இமாமாக இருப்பினும் அதிகாரமுடைய ஆட்சியாளனாக இருப்பினும் புகழ்மிக்க தலைவனாக இருப்பினும்  இஸ்லாத்தை நிலைநாட்ட உயிரை திறக்க தயாராக இருக்கும் தியாகியாக இருப்பினும்  வேறு எவராக இருப்பினும் சரியே மார்க்கத்தின்  அடிப்படையை தெளிவாக புரிந்து கொண்ட மக்களுக்கு இதை விட அழுத்தமாக கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனாலும்  பித்அத்துகள் சமூகத்தில் ஊறிப்போனதாலும...