WAQF
வக்ஃபு திருத்த மசோதாவா
திருட்டு மசோதாவா
**********************
பாகம் 3
******
வக்ஃபு மசோதா திருத்தங்களை முஸ்லிம் சமூகம் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பதாக ஒரு பிம்பத்தை சங்கிகள் சமூகவலைத்தளத்தில் தந்திரமாக பரப்பி வருகின்றனர்
தவறுகள் இருக்கும் பட்சத்தில் திருத்தங்களை எதிர்ப்பது என்பது அறிவீனர்களின் செயலாகும்
வக்ஃபு வாரியம் உருவாக்கப்பட்ட 1954 வருடம் முதல் 2013 ஆண்டு வரை பல முறை திருத்தங்கள் வக்ஃபு வாரிய நிபந்தனைகளில் மாற்றப்பட்டு உள்ளது
அப்போதெல்லாம் எந்த முஸ்லிம்களும் திருத்தங்களை எதிர்த்து போராடவில்லை
மாறாக திருத்தங்களை மனப்பூர்வமாக வரவேற்றனர்
தற்போது பீஜேபி அரசு தந்திரமாக கொண்டு வந்துள்ள 44 வகையான திருத்தங்களையும் கூட
ஒட்டு மொத்தமாக முஸ்லிம் சமுதாயம் எதிர்க்கவில்லை
மாறாக வக்ஃபுக்கு எதிரான சில விதிமுறைகளையும் வக்ஃபு சொத்துக்களை ஆக்கரமிக்க உதவும் தவறான விதிமுறைகளையுமே கடுமையாக எதிர்க்கின்றனர்
சட்டப்பூர்வமாக அவைகளை எதிர்கொள்ளவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்
இவைகளை மூடி மறைத்து விட்டு ஒட்டு மொத்த திருத்தங்களை முஸ்லிம் சமுதாயம் எதிர்ப்பது போல் ஒரு பிம்பத்தை தொடர்ந்து பரப்புவது சங்கிகளின் வழமையான கோயபெல்ஸ் வழிமுறையாகும்
வக்ஃபு சொத்துக்களை பாதுகாப்பதே எங்கள் லட்சியம் என்று பீஜேபி அரசு கூக்குரலிடுவது உண்மை எனில் அவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை ?
அநீதமாக இடிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டு
அதே இடத்தில் ராமர் கோவில் எழுப்பியுள்ள பாபர் மஸ்ஜிதுக்கு சொந்தமான இடத்தை மீட்டித்தருவதே முதல் கடமையாகும்
காரணம் வரலாற்று சிறப்புமிக்க பாபர் மஸ்ஜித் என்பதும் வக்ஃபுக்கு சொந்தமான இடமாகும்
அது போல் காசி மதுரா நகரங்களில் இடம் பெற்றுள்ள பள்ளிவாசல்கள் போன்று இந்தியா முழுவதும் இடிக்கப்பட வேண்டிய பள்ளிவாசல்கள் 3000 என்று சங்கிகள் அவதூறு பரப்பிவரும் அனைத்தும் வக்ஃபுக்கு சொந்தமான சொத்துக்களாகும்
அவைகளுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்பிவரும் சங்கிகளை சட்டப்படி கைது செய்து வக்ஃபுக்கு சொந்தமான அனைத்து இடங்களையும் பாதுகாப்பது பீஜேபி அரசாங்கத்தின் அடிப்படை கடமையாகும்
கடமைகளை கண்டு கொள்ளாது முஸ்லிம்களின் உடமைகளை அபகரிக்க துணைபுரியும் திருத்தங்களை கொண்டு வந்திருப்பது திருத்த மசோதா அல்ல
மாறாக அது திருட்டு மசோதாவாகும்
என்பதே முஸ்லிம்களின் கடுமையான குற்றச்சாட்டு
அறிவை அடகு வைத்து உணர்ச்சிகளுக்கு மட்டும் இடம் கொடுக்கும் அறிவீன சமுதாயம் அல்ல
முஸ்லிம் சமுதாயம் என்பதை சங்கிகள் உணர வேண்டும்
கவலை கண்ணீருக்கும்
முதலைகளின் நீலிக்கண்ணீருக்கும்
வேறுபாடு தெரியாத சமூகம் அல்ல
முஸ்லிம் சமுதாயம்
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
16-4-2025
Comments
Post a Comment