விஞ்ஞானமும் இறைநம்பிக்கையும்

    விஞ்ஞானமும் இறைநம்பிக்கையும்
                 **********************
                  கட்டுரை எண் 1515
                          ***********


அமானுஷ்யம் 

மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளை குறிப்பதற்கு பயன்படுத்தப்படும் வழமை சொல்லே அமானுஷ்யம் 

அறிவியல் ஏற்றுக்கொள்ளாத 
அல்லது அறிவியல் மறுக்கின்ற எதையும் நம்புவது மூடநம்பிக்கை என்பது விஞ்ஞானத்தை தூக்கி சுற்றுவோரின் கருத்தாகும்

இக்கருத்தை மேலோட்டமாக கவனிக்கும் போது 
அது உண்மை என்றே பகுத்தறிவும் சொல்லும்

காரணம் அறிவியலுக்கு மேல் எதுவும் இல்லை என்பதே அறிவியலை தூக்கி சுற்றுவோரின் அகந்தை  வாதமாகும் 

அறிவியல் மனித வாழ்வுக்கு ஏற்றமான பல முன்னேற்றங்களை வழங்கியுள்ளது என்பதில் 
மாற்று கருத்து இல்லை 

ஆனால் அறிவியலுக்கு மாற்றமாக எதுவும் நடப்பது இல்லை என்பது நடைமுறையில் 
ஏற்க இயலாத வாதமேயாகும் 



ஒரு சில கேள்விகளுக்கு அறிவியல் தன்னால் இயலாது என்று பதில் கூறாது 
மாறாக இனி நடக்க கூடும் அல்லது சாத்தியம் ஏற்படக்கூடும் என்பதே அறிவியலின் பதிலாக அமைந்திருக்கும்

உடலை விட்டு பிரியும் உயிரை தடுக்க முடியுமா 
அல்லது ஒரு உயிரை எதன் துணையும் இன்றி சுயமாக படைக்க இயலுமா ?
என்று அறிவியலிடம் கேட்டால் தற்போது வரை அதற்கான சூழல்  இல்லை 
ஆனால் இனி அதையும் சாதிக்கக்கூடும் என்றே  
அறிவியல் பதில் வரும் 

மனிதனின் உடலை பல கோணங்களில் ஆய்வு செய்து விடை கூறிய விஞ்ஞானத்திற்கு மனிதனின் மனதில் மறைத்து வைத்துள்ள எதையும் துல்லியமாக கண்டறிய முடியாது என்பதே எதார்த்தமான உண்மை 


எதற்கும் எல்லை இருப்பது போல் விஞ்ஞானத்திற்கும் எல்லை இருக்கும் என்பதே பகுத்தறிவு கூறும் விடையாகும் 

இஸ்லாம் விஞ்ஞானத்திற்கு ஊக்கமளிக்கும் மார்க்கம் 
ஆனால் இஸ்லாத்தில் இடம் பெற்றுள்ள அனைத்தும் விஞ்ஞானத்திற்கு உட்பட்டதாகவே அமைந்திருக்கும் என்பது ஏற்ப்புடையது அல்ல

ஈமான் தொடர்புடைய எதுவும் விஞ்ஞானத்திற்கு ஏற்றதாக அமைந்திருக்காது 

வானவர்கள்
கப்ரு வேதனை 
நபிமார்களின் அற்புதங்கள் 
போன்ற இஸ்லாமிய  நம்பிக்கைகள் விஞ்ஞானத்தின் துணைக்கொண்டு  நிரூபிக்க முடியாதவையாகும்  

அனைத்திற்கும் ஆற்றல் பெற்ற இறைவனுக்கு 
அனைத்தையும் படைத்த இறைவனுக்கு
எக்காலத்தையும் அறிந்த இறைவனுக்கு 
எதையும் செய்ய முடியும் என்ற ஆழமான 
இறை நம்பிக்கையே
விஞ்ஞானக்கூற்றுக்களை விட வலுவான 
மன உறுதியை உருவாக்கும் 

தூரமாக இருப்பவைகளை 
மறைந்திருப்பவைகளை
கண்ணுக்கு நேரடியாக தென்படாதவைகளை ஏற்கனவே படைக்கப்பட்டவைகளை  கண்டறியும் சாதனமே விஞ்ஞானமே தவிர 
இல்லாத ஒன்றை 
எவ்வித மூலப்பொருளும் இல்லாமல் படைக்கும் ஆற்றல் பெற்றதும் அல்ல விஞ்ஞானம்
 முறியடிக்கும் ஆற்றல் பெற்றதும் அல்ல விஞ்ஞானம் 


قُلْ اِنْ تُخْفُوْا مَا فِىْ صُدُوْرِكُمْ اَوْ تُبْدُوْهُ يَعْلَمْهُ اللّٰهُ‌ وَيَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏

(நபியே!) நீர் கூறும்
உங்கள் உள்ளத்திலுள்ளதை 
நீங்கள் மறைத்தாலும் அல்லது 
அதை வெளிப்படையாக தெரியப்படுத்தினாலும் அல்லாஹ் நன்கறிகின்றான்
இன்னும், வானம்  பூமியில் உள்ளவைகளை அவன் நன்கறிகின்றான்
அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்

(அல்குர்ஆன் : 3:29)


      நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                            24-4-2025




Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை