விவாகரத்தை விபரீதமாக்காதீர்
விவாகரத்தை விபரீதமாக்காதீர்
************************
கட்டுரை எண் 1515
***************
மனமகிழ்வுக்காகவும் உறவுகளை மேம்படுத்தவும் சட்டப்பூர்வமாக செய்யப்படுவதே திருமணம்
கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்படும் மனக்கசப்புகளை நீக்குவதற்கு பல முயற்சிகளை செய்தும் இணைந்து வாழ விரும்பாத தம்பதியர்களை
ஊராருக்காகவும் குடும்பத்திற்காகவும் கணவன் மனைவியாக காட்சி தந்து நிர்பந்தத்திற்காக அதிருப்தியோடு வாழும் நிலையை தொடர்ந்து ஏற்படுத்தாதீர்கள்
தாய் தந்தை
அண்ணண் தங்கை போன்ற இரத்த உறவுகளைப்போல் கணவன் மனைவி எனும் பந்தம் இயற்கையாகவே அமையும் பந்தம் அல்ல
மனம் விரும்பி இணைக்கப்படும் இணைப்புபாலம் மட்டுமே திருமணம்
பாலத்தின் தூண்கள் உறுதியாக இருக்கும் வரையே அப்பாலத்தின் துணைகொண்டு இரு குடும்பத்தார்களும் மகிழ்வோடு நடமாடுவார்கள்
ஒருவரையொருவர் பலி வாங்குவதற்காக விவாகரத்து உரிமையை தம்பதியர்கள் இழுத்தடிக்காதீர்கள்
இருவரும் பரஸ்பரம் பேசி கண்ணியத்துடன் பிரிந்து விடுவதே மறுமண வாழ்வுக்கும் மனநிம்மதியை பெற்றுத்தரும் என்பதே இஸ்லாம் கூறும் அறிவுரையாகும்
எந்த விவாகரத்திலும் சில இழப்புகளும் சங்கடங்களும் நிச்சயம் ஏற்படவே செய்யும்
அவைகளை உள்வாங்கியே விவாகரத்தை நோக்கி பயணிக்கும் தம்பதியர்களும் இறுதி முடிவு எடுக்க வேண்டும்
ஈகோவாலும் மடத்தனமான யோசனையாலும் விவாகரத்தை செய்து விட்டு மீண்டும் அமைந்த வாழ்வை இழந்து விட்டோமே என்று புலம்பும் நிலைக்கு குறிப்பாக தம்பதியர்கள் சென்று விடக்கூடாது
விவாகரத்தை மறுமண வாழ்வுக்கு கருவியாக மாற்றுங்கள்
மாறாக விவாகரத்தை விபரீதமாக மாற்றி விடாதீர்கள்
எந்த கணவனும் மனைவியின் நூறுசதவிகித திருப்தியை பெறும் விதம் நடக்கவே முடியாது
எந்த மனைவியும் கணவனின் நூறு சதவிகத திருப்தியை பெறும் விதம் நடக்கவே முடியாது
இதுவே எதார்த்தம்
பிறர் வாழ்வுடன் தனது வாழ்வை ஒப்பீடு செய்வதே இல்லற வாழ்வை நாசமாக்கும் முதல் அம்சமாகும்
முறையான வழிகாட்டல்கள் இல்லாத ஏனைய சமூகம் விவாகரத்தில் தடுமாறுவதை போல் வாழ்வியல் நெறிகளை முறையாக கற்றுக்கொடுக்கப்பட்டுள்ள இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் இவ்விசயத்தில் அறிவீனமாக செயல்படுவது உலகிலும் கஷ்டத்தை ஏற்படுத்துவதுடன் மறுமையிலும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதை மறவாதீர்
எதிரியாக இருப்பினும் அவரது நலனுக்கு குந்தகம் விளைவிப்பது
முஸ்லிம்களின் பண்பாடு அல்ல
اَلطَّلَاقُ مَرَّتٰنِ فَاِمْسَاكٌ بِمَعْرُوْفٍ اَوْ تَسْرِيْحٌ بِاِحْسَانٍ
தலாக் இரண்டு முறைகளாகும் (தவணைக்குள் முறைப்படி கணவன் மனைவியாகச் சேர்ந்து வாழலாம் அல்லது நேர்மையான முறையில் பிரிந்து விடலாம்
(அல்குர்ஆன் : 2:229)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
13-4-2025
Comments
Post a Comment