உயிரே உனக்காக
உயிரே உனக்காக
************
கட்டுரை எண் 1505
***********
மரணத்ததிற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மரணமே மனிதனின் இறுதியான சொத்தாகும்
மரணத்திற்கு மட்டுமே
மனிதன் கடுகளவும் முயற்சி
செய்ய வேண்டிய அவசியம் இல்லை
பிரபஞ்சம் தோன்றியது முதல் எவருடைய மரணத்திற்காகவும் இயற்கையாக நடைபெறும் லட்சக்கணக்கான செயல்களில் ஒன்றும் கூட
ஒரு விநாடியும் ஸ்தம்பித்தது இல்லை
தனது செயலை சிறு நேரமும்
ஒத்தி வைத்ததும் இல்லை
வாழும் உயிரினங்களுக்கே பிரபஞ்சம் சொந்தம் இறந்துவிட்ட எதற்கும் பிரபஞ்சம் சொந்தம் இல்லை என்பதே இதன் சாரம்
எந்த உடலை வளர்க்கவும்
எந்த உடலின் இச்சைகளை போக்கவும்
தவறான வழிகளை தேர்வு செய்து மனிதன் வாழ்கிறானோ
மரணத்திற்கு பின் அந்த உடலை மட்டும் குடும்பத்தார் கரங்களில் இறைவன் முழுமையாக ஒப்படைத்து விடுகிறான்
அந்த உடலை 24 மணிநேரமும் கூட தன்னிடம் வைத்துக்கொள்ளாது
மண்ணுக்கே உரமாக்கி விடுகிறது
உன்னுடைய குடும்பம்
இதுவே மனிதனின் அர்ப்பமான வாழ்க்கை முறை
இந்த வாழ்வியலை நெறிப்படுத்தி மீண்டும் அதே உடலில் மறுமையில் உயிரை மீட்டும் போது ஒவ்வொரு மனிதனும் உன்னதமான அந்தஸ்த்தை பெறுவதற்கு வழங்கப்பட்டதே உயிர்
உயிரே உனக்காக
நீ எதற்காக
நீ யாருக்காக
நாட்களை கடத்துகிறாய்
உயிரை கொடுத்தவனையும்
உயிரை எடுப்பவனையும்
உயிரை மீட்டுபவனையும் சிந்தனையில் ஏற்றுவோம்
சீரிய வழியில் நடப்போம்
இன்ஷா அல்லாஹ்
اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ
உங்களில் எவர் செயல்களால்
மிகவும் அழகானவர் என்பதை சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் அவன் படைத்தான் மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன் மிக மன்னிப்பவன்
(அல்குர்ஆன் : 67:2)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
5-1-2025
Comments
Post a Comment