மயிறும் உயிரும்
மயிறும் உயிரும்
**********
பூமி தன் மீது சுமக்கும் மனிதர்களை விட
தன் அடி வயிற்றில் குழி தோண்டி புதைத்ததே பன்மடங்கு அதிகம்
எவரை சுமப்பதற்கும் பூமி பெருமைப்படுவதும் இல்லை
எவரை இழந்ததற்கும் பூமி கவலை கொள்வதும் இல்லை
வயிற்றுக்கு தீனி போட்டு உடலை வளர்க்க தெரிந்த மனிதனுக்கு உயிருக்கு உரம் போட்டு நீடிக்க செய்யும் ஆற்றலும் இல்லை
கருவில் உன்னை சுமந்த தாய்கும் கூட
உன் உடலில் உயிர் எவ்வாறு நுழைந்தது
எவ்வழியாக நுழைந்தது என்ற அடிப்படை ஞானமும் கூட கிடையாது
தலையில் முளைத்திட்ட மயிரைக்கூட
சுயமாக படைக்க இயலாத உனக்கு
உன் உடலில் உயிரை கொடுத்த இறைவனை மறந்தும் புறக்கணித்தும் நடப்பதே அறிவீனத்தின் உச்சம்
وَذَرِ الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَعِبًا وَّلَهْوًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا وَ ذَكِّرْ بِهٖۤ اَنْ تُبْسَلَ نَفْسٌ بِمَا كَسَبَتْ لَـيْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ وَلِىٌّ وَّلَا شَفِيْعٌ وَاِنْ تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا يُؤْخَذْ مِنْهَا اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اُبْسِلُوْا بِمَا كَسَبُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَ لِيْمٌ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ
இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடுங்கள்
அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்துவீராக
அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ பரிந்து பேசுபவரோ இல்லை
(தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும்,
அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது இவர்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள் இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்கு கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு
(அல்குர்ஆன் : 6:70)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
31-1-2025
Comments
Post a Comment