சிறந்த மனைவி யார்

       எப்பெண் சிறந்த மனைவி 
               ******************
              கட்டுரை எண் 1509
                    *************


படித்த பெண்ணாக அமைந்தால் 
வாழ்வு நிம்மதியாக இருக்கும்

அழகான பெண்ணாக இருந்தால்
வாழ்வு நிம்மதியாக இருக்கும்

கணவனுக்கு கட்டுப்படும் 
பெண்ணாக இருந்தால் 
வாழ்வு நிம்மதியாக இருக்கும்

குடும்பத்தை கவனிக்கும் 
பெண்ணாக இருந்தால் 
வாழ்வு நிம்மதியாக இருக்கும்

வசதியான பெண்ணாக இருந்தால் 
வாழ்வு நிம்மதியாக இருக்கும்

சோசலிசம் கற்ற பெண்ணாக இருந்தால் 
வாழ்வு நிம்மதியாக இருக்கும்

வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தால் 
வாழ்வு நிம்மதியாக இருக்கும்

ஆலிமா பெண்ணாக இருந்தால் 
வாழ்வு நிம்மதியாக இருக்கும்

தொழுகையாளி பெண்ணாக இருந்தால் 
வாழ்வு நிம்மதியாக இருக்கும்

இப்படி பல எதிர்பார்ப்புகளும் தேடல்களும்  திருமணத்தை எதிர்நோக்கும் இளைய சமூகத்தின் இதயங்களில் ஆழமாக குடியிருக்கும்  


மேற்கூறப்பட்ட அனைத்து அம்சங்களும்  ஒன்றிணைந்து அமையும் வாழ்கைத் துணையை கற்பனையில் அடையக்கூடும்

ஆனால் நிஜத்தில் நிச்சயம் அமையாது


இவைகளில் ஒரு சில எதிர்பார்ப்புகள் நிறைவாகவோ அல்லது குறைவாகவோ சிலருக்கு அமையலாம்          

அவ்வாறு அமைந்தாலும்  மனநிம்மதியை 
நூறு சதவிகிதம் எவருக்கும் உத்திரவாதம் 
தர முடியாது               

ஆனால் இவை அல்லாத வேறு ஒரு தனிப்பட்ட
 அம்சம் நிறைந்த மனைவி அமைந்தால் அதுவே வாழ்வில் ஒரு ஆடவனுக்கு  மனநிம்மதியை முழுமையாக பெற்றுத்தரும்       


இருப்பதை கொண்டு தன்னிறைவு அடையும்  பக்குவப்பட்ட பெண் மனைவியாக  அமைவதே கணவனுக்கு  மன அமைதியை முழுமையாக  பெற்றுத்தரும் 

குடிசையில் வாழ்ந்தாலும்  
மாளிகையில் வாழ்ந்தாலும் 
வாக்குப்படும் கணவனின் 
எதார்த்தத்தை அறியும் 
மனம் அவர்களிடமே இருக்கும் 


வறுமை தழுவினாலும்
வசதிகள் பெருகினாலும்
மனதை ஆளுமை செய்யும் 
குணம் அவர்களிடம் இருக்கும்

வீட்டுக்குள் நுழையும் கணவன்
பாரங்களை சுமந்தே நுழைவான்
என்ற நடைமுறை புரிதலும் அவர்களிடம் இருக்கும்

அதனால் தான் நபிகளார் (ஸல்) அவர்கள் பெண்கள் நரகை அடையும் காரியங்களை குறிப்பிடும் போது ஒரு கணவன் பல தியாகங்களை செய்தாலும் 
ஏதோ ஒரு நாள் அவர்கள் கேட்ட பொருளை வாங்கி கொடுக்காவிடில் உன்னை திருமணம் செய்து எந்தப்பயனையும் அடையவில்லை என்று உதாசீதனம் செய்து கணவனின் மனதை நோகடிப்பார்கள் என்றார்கள் 
புகாரி 29 எண்ணில் இந்த நபிமொழியை காணலாம்

இறைத்தூதர் ஒருகுற்றச்சாட்டை அழுத்தமாக குறிப்பிடுகிறார்கள் என்றால் பெண்களின் எதார்த்த குணமுமே அவை என்பதை ஒரு ஆடவன் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் 

அது போன்ற உதாசீதனத்தை மனைவியிடம் எதிர்கொள்ளும் போது
அதை ஜீரணிக்க வேண்டும் என்பதே ஆடவன் பெற வேண்டிய வாழ்க்கை பாடம்  

ஆனால் மனஉளைச்சல் கணவனின் இதயத்தை விட்டு நீங்காது என்பதை பெண்களும் உணர வேண்டும்

கணவனின் உணர்ச்சி நரம்புகளை தனது சொல் மூலம் சாகடித்து விட்டு மீண்டும் அதே கணவனிடம் தான் அன்றாடம்  தஞ்சம் அடைகிறோம் என்ற உறுத்தல் பெண்களுக்கு வேண்டும் 

அந்த உறுத்தலில் பாடம் பெறும் பெண்ணே பெண்களில் மிக உயர்ந்தவள் 
மறுமை நாளில் மிக சிறந்தவள்  

     நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                           29-1-2025




 


                                               

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை