மாற்று கருத்துடையோரை மாற்றார் போல் கருதாதீர்

          மாற்று கருத்துடையோரை 
   மாற்றார் போல் கருதும் மனநிலை 
                   *****************
               கட்டுரை எண்  1508
                     **************

எதை வாயால் மொழிந்து
மனதளவில் ஏற்றுக்கொண்டால் ஒரு மனிதன் முஸ்லிம் என்ற வட்டத்திற்குள் நுழைவானோ 
அந்த குர்ஆன் சுன்னா என்ற  அடிப்படையை பின்பற்றினால் மட்டுமே அவனால் மறுமையில் நிச்சயமாக வெற்றியடைய முடியும்


அந்த அடிப்படையை தெளிவாக அறிவதற்கு முயற்சி செய்பவர்கள்  இஸ்லாமிய  கல்வி ஞானம் வழங்கப்பட்ட சஹாபாக்கள் முஹத்திசீன்கள் 
மற்றும் ஆய்வில் சிறந்த மார்க்க அறிஞர்களை நாடுவதும் தேடுவதும் மார்க்கத்தில் தடுக்கப்படவில்லை 
காரணம் கல்விஞானம் கொடுக்கப்பட்டவர்களிடம்  அறியாததை கேட்டுத்தெரிந்து கொள்ளுமாறு 
குர்ஆன் தெளிவாக கட்டளையிடுகிறது


وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِىْۤ اِلَيْهِمْ‌ فَسْــٴَــلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَۙ‏

(நபியே!) இன்னும் உனக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்
ஆகவே (அவர்களை நோக்கி) 
நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால்
(முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள் (என்று கூறுவீராக)

(அல்குர்ஆன் : 16:43)


ஆனால் கல்வி ஞானம் என்பதற்கு குறுகிய வட்டத்தை இஸ்லாம் விதிக்கவில்லை 
மனித சமூகம் இருக்கும் வரை 
கல்வி ஞானம் கொடுக்கப்படுவோர் இறைவனால் தொடர்ந்து உருவாக்கப்படுவார்கள் 

எனினும் நெடுங்காலமாக இவ்விசயத்தில் ஒவ்வொரு சாராரும் குறுகிய வட்டத்தை உருவாக்கி தன்னிறைவு  அடைகின்றனர் 

இதன் காரணமாகவே ஒவ்வொரு சாராரும் 
தங்களை பிற முஸ்லிம்களிடம் இருந்து தனித்து காட்டுவதில் மும்முரம் காட்டுகின்றனர்

குர்ஆன் சுன்னாவை அடிப்படையாக ஏற்றுக்கொண்ட சிலர்களும் தங்களை தனித்து காட்டிக்கொள்வதில் பெருமை அடைகின்றனர்

குர்ஆன் சுன்னா என்ற அடிப்படையை ஏற்றுக்கொண்டவர்கள்  சில விடயங்களில் கருத்து வேறுபாடு கொள்வதால் குர்ஆன் சுன்னாவை அடிப்படையாக ஏற்றுக் கொண்டவர்களும் தங்களை அவர்களிடம் இருந்து  தனித்து காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை 
அவ்வாறு தனித்து காட்டிக்கொள்ள இஸ்லாத்தில் 
எந்த முகாந்திரமும் இல்லை 


குர்ஆன் சுன்னாவில் இருந்து நேரடி ஆதாரங்களை நிரூபித்த பின்பும் இக்கருத்தை கிபாருல் ( முந்தைய ) உலமாக்கள் சொல்லியுள்ளார்களா  என்று எதிர்கேள்வி கேட்பதும் வழிகேடுகளில் நவீனமாகும் 



சூட்டப்படும் பெயர்களை கொண்டு  சத்தியம் அசத்தியத்தை பிரித்து அறிவது சாத்தியமற்றது 
எடுத்து வைக்கப்படும் குர்ஆன் சுன்னா ஆதாரங்களை வைத்தே சத்தியம் எது அசத்தியம் எது  
என்பது  தீர்மானிக்கப்பட வேண்டும்


மாற்றுக்கருத்துடையவர்களை மாற்றுமதத்தவர்கள் போல் சித்தரிக்கும் போக்கும் பெருகி விட்டது

وَاَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَاحْذَرُوْا‌  فَاِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوْۤا اَنَّمَا عَلٰى رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِيْنُ‏

அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள் (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்
(இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால்
(நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்

(அல்குர்ஆன் : 5:92)



      நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                             14-1-2025





Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை