வழிகேடுகளின் வடிவங்கள்

        வழிகேடுகளின் வடிவங்கள்
                 *******************

வழிகேடுகள் இரு வகை

உலக வழிகேடுகள்
மார்க்க பெயரால் வழிகேடுகள்

உலக வழிகேடுகளை 
பகுத்தறிவை கொண்டும் அனுபவத்தில் சந்திக்கும்  விளைவுகளை கொண்டும் பிறர் படும் இன்னல்களை கண்டும் தவறு என்று மனிதனால்  தீர்மானிக்க இயலும் 

ஆனால் மார்க்கத்தின் பெயரால் ஏற்படும் வழிகேடுகளை பகுத்தறிவை மட்டும் அளவுகோல்  கொண்டு தவறு என்று தீர்மானிக்க இயலாது 

காரணம் மனிதனின் அறிவு சரி காணும் சிலதையும் இஸ்லாமிய மார்க்கம் வழிகேடு என்று குறிப்பிடுகிறது 

மார்க்கத்தின் பெயரால் நுழைவிக்கப்படும் 
அனைத்து வழிகேடுகளும் நன்மை எனும் பெயராலும் தன்னடக்கம் எனும் பெயரில் மார்க்க அறிஞர்கள் நல்லோர்கள் முன்னோர்கள் பெயராலுமே பல கோணத்தில்  நுழைவிக்கப்படும்

இதற்கு ஒவ்வொரு வழிகேடர்களும் ஒவ்வொரு விதமான சுயவிளக்கத்தை கற்பித்தும் தங்களின் தவறான வாதங்களை முன்வைத்தும் மார்க்கத்தின் பெயரால் அறிமுகம் செய்யும் தவறான செயல்களை நம்பிக்கைகளை  நியாயப்படுத்திக் கொள்வார்கள் 


பித்அத்துகள் சிர்க்குகள் மத்ஹபுகள்  யாவும் 
இதன் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டதே 

நியாயமான எதிர் கேள்வி கேட்போர்களையும் முறையான மறுப்பு சொல்பவர்களையும் தவறான முறையில் சித்தரித்து சமூகத்தில் தனித்து விடவே முயற்சி செய்வார்கள்

தொடுக்கப்படும் எதிர்வாதங்களுக்கு பதில் கூற துணிவில்லாது முன்னோர்களையும் பெரியார்களையும் அவமதிப்பதாக வெறுப்பை ஏற்படுத்தி பாமர மக்களை தக்க வைத்துக்கொள்ள முற்படுவார்கள் 


மனிதனுக்கு இரு விழிகளைப்போல்
மறுமை வெற்றிக்கு இரு விழிகளாக குர்ஆன் சுன்னாவையே இஸ்லாம் அடிப்படை  அளவுகோலாக  குறிப்பிடுகிறது


குர்ஆன் சுன்னா என்ற அளவுகோல் தாண்டி சிந்திக்கப்படும்  வாதிக்கப்படும்  நியாயப்படுத்தப்படும் எதுவும் மறுமை வெற்றிக்கு உதவாது 

அதனால் தான் புதிதாக இஸ்லாத்தை தழுவுபவர்களுக்கு குர்ஆன் சுன்னாவை மட்டும் 
முன் வைக்கிறோம்



லாயிலாஹா இல்லல்லாஹ் என்ற திருக்கலிமாவின் சாரமே இக்கருத்தை உள்ளடக்கியதாகும்


     நட்புடன் J . யாஸீன் இம்தாதி
                            10-1-2025
 



Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை