மணவாழ்வின் ரகசியங்கள்
மணவாழ்வின் ரகசியங்கள்
******************
கட்டுரை எண் 1539
************
சிரமங்களை சிக்கல்களை அடிக்கடி எதிர் கொண்டு அவைகளை சகித்து கொள்ளும் தன்மையை ஆடவன் அன்றாட வாழ்வில் சந்திப்பதால்
அவனது மனைவி உடல் அளவில்
சிறு அளவு சிரமங்களை அனுபவிக்கும் நிலையில் பெரியளவுக்கு மனைவியின் சிரமங்களை சிந்திக்க மாட்டான் அதற்காக வெளிரங்கத்தில் பாசத்தை வெளிப்படுத்தவும் மாட்டான்
ஒரு பெண் வெளியுலகில் சிரமங்களை பாரங்களை சிக்கல்களை எதிர் கொள்ளும் சூழ்நிலை குறைவாக இருப்பதின் காரணத்தால் கணவனின் சிறு அளவு சிரமங்களை கூட பெரியளவில் மனைவியர்கள் எடுத்துக்கொள்வார்கள்
அதை காரணமாக வைத்தே கணவனருகில்
பாசத்தையும் அரவணைப்பையும்
அதிகம் வெளிப்படுத்துவார்கள்
மனிதனை இயல்பாக தாக்கும் தலைவலி
உடல் வலியை கணவனிடம் கண்டாலும் மனைவி கணவனுக்காக அதிகம் பதறுவதும் கணவனை மருத்துவமனைக்கு அழைப்பது செல்வதும்
இதனால் தான்
இந்த எதார்த்த உண்மையை புரிந்து கொள்ளாத மனைவியர்கள் கணவன் தன்னைப்போல்
தன் மீது பாசம் வைக்கவில்லை என்று கருதிவிடுவார்கள்
ஆனால் கணவன் மனைவியின் மீது வைத்துள்ள பாசத்திற்கும் இந்த நடவடிக்கைக்கும்
எவ்வித தொடர்பும் இல்லை
வாழ்வில் அனுபவம் பெற்று
பெண்ணிண் குணாதிசயத்தை அறிந்த கணவன் தனது மனைவி சிறு அளவில் பாதிக்கப்பட்டாலும் அதற்காக பெரியளவு வருந்துவது போல் மனைவியின் கண் முன்னே பாவனையை வெளிப்படுத்துவான்
இச்செயலை கணவன் தன்னிடம் நடிக்கிறார் என்று மனைவியர்கள் புரிந்து கொள்ளக் கூடாது
மாறாக தன் மீது வைத்திருக்கும் பாசத்தை
குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என்பதை வெளிப்படுத்துவதற்கே கணவர் இவ்வாறு
நடந்து கொள்கிறார் என்றே மனைவியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்
படிப்பறிவு மேலோங்கியிருப்பினும்
இது போன்ற வாழ்கைத் தத்துவங்களை
கல்லூரிகளோ பாடசாலைகளோ கற்றுத்தராது என்பதை இளையதலைமுறையினர் உணர வேண்டும்
கடந்த கால மக்களை விட தற்கால இளையதலைமுறையிடம் வாழ்வின் எதார்த்த புரிதல்கள் குறைவாகவும் கற்பனைகள் நிறைவாகவும் சகிப்புத்தன்மை அரிதாகவும் காணப்படுகிறது
அதன் விளைவே விவாகரத்துகள் மலிந்து வருகிறது
இக்கரைக்கு அக்கரை பச்சை
என்பது மனித வாழ்வின் எதார்த்தத்தை விளக்கும் பழமொழியே
ஆனால் நபிமொழிகள் பழமொழிகளை மிஞ்சிய வாழ்வின் உண்மை நடைமுறைகளை
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனித சமூகத்திற்கு கற்பித்து விட்டது
முஸ்லிம் சமூகத்திற்கு தற்போதைய
அடிப்படை தேவை பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வடிவமைக்கப்பட்ட
உலகக்கல்வி அல்ல மாறாக மார்க்ககல்வியே
வாழ்வின் மகிழ்சியை வாழ்வின் கட்டுப்பாடுகளை உடைத்தெரியும் எக்கல்வியும் சாத்தானியக்கல்வியே
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
9-12-2024
Comments
Post a Comment