விடியலை தேடி விரக்தியில் மனித சமூகம்
விடியலை தேடி விரக்தியில்
தத்தளிக்கும் தலைவர்கள்
*******************
எதற்காக போராட வேண்டும் என்று இன்றும் நாட்டு மக்களை அழைக்கிறார்களோ
எந்த போராட்டங்களை முன்னெடுத்து சாதித்தவர் என்று சில தலைவர்களை முன்னுதாரணம் காட்டுகிறார்களோ
அவர்கள் பெற்றுத்தர துடிக்கும்
பல உரிமைகளை சுதந்திரங்களை 1446 ஆண்டுகளுக்கு முன்பே எளிதாக பெற்றுத்தந்து சாதனை நிகழ்த்தி காட்டியவர் அண்ணல் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள்
அம்பேத்கர்
பெரியார்
சேகுவாரா
போன்றவர்களை முன்னுதாரணம் காட்டுபவர்கள்
அவர்கள் மக்களை திரட்டி எதற்கு போராடினார்களோ அந்த உரிமைகளை சுயமரியாதை உணர்வை கடந்த பதினான்கு நூற்றாண்டுகள் முதல் இன்று வரை நடைமுறையில் வெளிப்படுத்தி காட்டுவது முஸ்லிம் சமுதாயமே
மொழி இன உணர்வை தாண்டியதே மனிதநேயம் என்பதை இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டே நடைமுறை படுத்த இயலும் என்பதற்கும் நபிகள் நாயகத்தின் வரலாறு எடுத்துக்காட்டாக திகழ்கிறது
படைப்பாளனைத்தவிர படைப்பினங்கள் யாவும் இறைவனின் அடிமைகள் என்பதை ஏற்றுக்கொள்வதின் மூலம்
நீ உயர்ந்தவன் அவன் தாழ்ந்தவன் என்ற கீழ்த்தரமான சிந்தனையை சாக்கடையில் தள்ளி சாதனைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது
நபிகள் நாயகத்தின் வரலாறு
புரட்சியாளர்கள் அவர்களின் போராட்டத்தில் வறட்சியை சந்தித்து மாண்டு போனார்கள்
புரட்சிக்கு வித்திட்டு மனித சமூகத்தில் மாற்றம் எனும் சிந்தனை விளைச்சல் கண்டு எழுச்சி வரலாற்றில் இன்று வரை முதல் ஆளாக பிரகாசமளிப்பவர் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள்
நபிகள் நாயகம் ( ஸல் )அவர்கள் மரணித்து விட்டாலும் அவர் மனித சமுதாயத்திற்கு விட்டுச்சென்ற கொள்கைகள் சட்டங்கள் புரட்சியை விரும்பும் லட்சியவாதிகளுக்கும் விடுதலை நாடும் மக்களுக்கும் சான்றாக விளங்குகிறது
கை அருகில் நபிகளார் வழங்கிய தீர்வு பெட்டகம் இருக்கும் நிலையில்
மனிதனை அடிமைப்படுத்தும் அனைத்து விதமான விலங்கில் இருந்து விடுபட்டு
தன்மானத்துடன் வாழும் முஸ்லிம் சமூகத்தை கண் கூடாக காணும் நிலையிலும் வாழ்நாளை வீணடித்து வீண் போராட்டங்களை முன்னெடுத்து செல்லும் தலைவர்களையும் அவர்கள் பின் அணி வகுத்து செல்லும் அப்பாவி மக்களையும் கண்டு வியப்பாக உள்ளது
வானத்திலும் பூமியின் கீழ்பகுதியை குழி தோண்டியும் மனிதநேய சட்டங்களை தேடும் பிற சமூகம்
இனியாவது சிந்திப்பார்களா என்ற கேள்வியுடன் விடை பெறுகிறேன்
قُلْ فَاْتُوْا بِكِتٰبٍ مِّنْ عِنْدِ اللّٰهِ هُوَ اَهْدٰى مِنْهُمَاۤ اَتَّبِعْهُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் ( குர்ஆன் சுன்னா ) இவ்விரண்டையும் விட நேர்வழிக்காட்டக் கூடிய வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டு வாருங்கள்
நானும் அதைப் பின்பற்றுகிறேன் என்று (நபியே!) நீர் கூறும்
(அல்குர்ஆன் : 28:49)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
7-12-2024
Comments
Post a Comment