மாதர் சங்கமா மடமைச்சங்கமா

     மாதர்சங்கமா மடமைச்சங்கமா
                *********************
                 கட்டுரை எண் 1503
                      *************

சமூகவலைத்தளம் கூத்தாடிகளின் கேந்திரமாக மாறியதின் விளைவு தற்போது ஒழுக்ககேடான காரியங்களுக்கு ஊக்கம் தரும் விதமாக ஆதரித்து பேசுவதும் கட்டுப்பாடுகளை அடிமைத்தனமாக சித்தரித்து நடைமுறையில் இருக்கும் அழகிய பண்பாடுகளை சீரழிப்பதும் சாதாரணமாகி விட்டது

ஆடவனின் பார்வையில் தான் தவறு இருக்கிறது பெண்கள் உடுத்தும் அரைகுறை  ஆடையில் தவறு இல்லை என்று பெண்களே அறிவிலித்தனமாக  பேசி வருவதை பரவலாக காண முடிகிறது 

ஆடவன் பார்க்கும் பார்வையில் தான் தவறு இருக்கிறது என்ற வாதத்தில் அப்பெண்கள் உண்மையாளர்களாக  இருந்தால் பெண்கள் முழு நிர்வாணமாகவும் பொது இடங்களில் வலம் வரலாமே 
அதில் மட்டும்  என்ன தவறு இருக்கிறது ?பெண்களுக்கு என்ன பாதிப்பு இருக்கிறது ?

இவ்வாறு அறிவிலித்தனமாக பேசுபவர்கள் அவர்களின் பெண் மக்களை சமூகத்தில் நிர்வாணமாக வலம் வருவதை மனப்பூர்வமாக  அங்கீகரிப்பார்களா ?

குறைந்த பட்சம் அவர்களின் இல்லத்தில் அவர்களின் பெண் மக்களை முழு நிர்வாணிகளாக 
நடமாட விடுவார்களா   ?

டூபீஸ் ஆடைகளை உடுத்தி பள்ளிக்கூடங்களில் வழிபாட்டுதலங்களில் அவர்களின் பெண்களை அனுப்பி வைப்பார்களா ? 
அவ்வாறு அனுப்பி வைப்பதை ஆசிரியைகள் சம்மதிப்பார்களா  ?


ஆண் பெண் உடலியல் வேறுபாடுகளை கூட பகுத்தறிவால் உணர முடியாத அடிமுட்டாள் பெண்களே தற்போது  பொதுத்தளத்தில் அறிவுரை கூறும்  நிகழ்சிகளை நடத்தும் அளவு சூழ்நிலை மாறி விட்டது

பொது இடத்தில் நடமாடும் மக்களின் நலனை  கருத்தில் கொண்டே எதுவும் அங்கீகரிக்கப்ப வேண்டும் 

அதற்கு தான் சட்டங்கள் கட்டுப்பாடுகள் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளனர் 

கழுத்தில் அணியும் ஆபரணங்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சியில் கால் பகுதியை கூட
 தங்களது மானத்தை காப்பாற்றி கொள்ள பெண்கள் அக்கரை செலுத்துவது இல்லை 

பெண்கள் போகப்பொருளாக மாற்றப்பட்டார்கள் என்பது உண்மை இல்லை 
மாறாக பெண்களே தங்களை போகப்பொருளாக காட்டிக்கொள்வதில் ஆனந்தம் அடைகிறார்கள் என்பதே தற்கால  நடைமுறை உண்மை 


நான் எப்படி வேண்டுமானாலும் நடப்பேன் என்று பெண்கள்  குதர்க்கம் பேசினால் அதன் மூலம் மனதளவில் உடல் அளவில் சலனத்துக்கு உட்படுவோர் எப்படி வேண்டுமனாலும் எதிர் வினை எற்படுத்துவதையும் சகித்துக்கொள்ள வேண்டும்  இவ்விசயத்தில் உத்தமிகளை போல் ஆடவர்களை மட்டும் குறை கூறக்கூடாது மாறாக அதனால் ஆடவர்களால்  ஏற்படும் விளைவுகளையும் இணைத்தே  சகித்து எளிதாக கடந்து விட வேண்டும்


ஒரு பெண் ஆந்நிய ஆடவனுக்கு முன் அரைகுறை ஆடையுடன் சுதந்திரமாக சுற்றி திரிந்தால் 
அவள் அந்நிய ஆடவர்கள் தன்னை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்நிலை குணத்தை சுமந்தவளாகவே தவிர அவ்வாறு நடப்பது இல்லை 


அரைகுறை ஆடை அணிந்து நடப்பதால் ஒரு பெண் தனது அறிவையோ ஆற்றலையோ திறமைகளையோ அதிகாரத்தையோ வளர்த்தி கொள்ள இயலாது 

ரசனைகளையும் உணர்சி நரம்புகளையும் தூண்டாத வரையே ஒரு ஆண் பொது இடங்களில் இயல்பாக நடந்து கொள்ள முடியும் 

ஆடவர்களின் பார்வைகளையும் எண்ணங்களையும் கட்டுப்பாடுகளையும்  வேண்டுமென்றே திசை திருப்பி ஆடனின் பார்வையில் மட்டும் கோளாறு இருக்கிறது என்று வாதிக்கும் பெண்களும் அவ்வாறு நடந்து கொள்ளும் பெண்களும்
தனது எண்ணத்தில் கீழ்த்தரமான கேடுகெட்ட சிந்தனைகளில் சுற்றித்திரிகின்றனர் என்பதை 
மூடி மறைக்கின்றனர்

திருமணம் முடிந்து கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து வரும் ஆடவர்களின் குடும்ப வாழ்வை சீரழித்து 
சிறார்களின் எண்ணங்களில் காம உணர்வை ஊட்டி இளைய தலைமுறையின் எதிர்காலத்தை நாசமாக்கி 
அதனால் வளரும் பருவத்தில் ஆடவர்களின் ஆண்மையை தளர்வாக்கி 
அதன் மூலம் அந்த ஆடவனை நம்பி வாழ்க்கை நடத்தும் குடும்ப பெண்களின் நிம்மதிய கெடுத்து விவாகரத்து வரை இழுத்துச்செல்வதற்கு காரணிகளாக செயல்படும் பெண்களே  ஆடவர்களை விட முதன்மை குற்றவாளிகள் கேடுகெட்டவர்கள்  கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் 

ஒரு ஆண் எதனால் வழிகெடுவான் என்பதை ஆண்கள் தான் தீர்மானிக்க முடியும் 
ஒரு பெண் எதனால் வழிகெடுவாள் என்பதை பெண்கள்  தான் தீர்மானிக்க முடியும்

காரணம் ஆண்களின் 
உடற்கூறுகள் வேறு 
பெண்களின் உடற்கூறுகள் வேறு 

இந்த எதார்த்த உண்மை தெளிவாக அறிந்து கொண்டு தான் பெண்களில் பலர் ஆடைகளில் வரம்பு மீறி கீழ்த்தரமாக சுற்றித்திரிகின்றனர்

உடலில் அவசியம் மறைக்க தேவை இல்லாத உறுப்புகளை கூட முழுமையாக  மறைத்து பொது இடங்களில் கண்ணியமாக நடக்கும் ஆடவர்கள் இவ்விசயத்தில் சிறந்தவர்களா 
அல்லது அவசியம் வெளியுலகில் மறைக்க வேண்டிய உடல்உறுப்புகளை கூட மறைக்காது மானம் கெட்டு திறந்து போட்டுத்திரியும் பெண்கள் சிறந்தவர்களா ?

எதிர்பாலின உணர்ச்சிகளை தூண்டி அவர்களின் சிந்தனையை சீரழித்து விடக்கூடாது என்று கண்ணியமாக வெளியுலகில்  நடமாடும் ஆண்கள் சிறந்தவர்களா 
அல்லது எவ்வாறு நடந்தால் ஆண்களின் உணர்ச்சி தூண்டப்பட்டு விளைவுகள் ஏற்படுமோ அவைகளை அன்றாடம் செய்தித்தாள்களில் நடைமுறை வாழ்வில் கண்டும் வேண்டுமென்றே  புறக்கணித்து சுதந்திரம் எனும் பெயரில் தரிகெட்டு நடக்கும் கழிசடை பெண்கள் சிறந்தவர்களா  ?


பெண்களுக்கு படிப்பறிவு மட்டும் வளர்ந்தால் போதாது மாறாக பகுத்தறிவை தக்க வைக்கும் திறனும் மேம்பட வேண்டும் 

பெண்கள் ஆயிரம் வீராவசனங்களை இவ்விசயத்தில்  பேசினாலும் இறுதியில் மானம்கெட்டு வாழ்வை இழந்து ஒப்பாரி வைத்து கூப்பாடு போடும் நிலையை மட்டும்  இன்று வரை சந்தித்துள்ளனர்
இனியும் அதிகமாக சந்திப்பார்கள்


மாதர் சங்கம் என்று பெயர் சூட்டிக்கொண்டு மாதர்களுக்கு எதிராகவும் இளம்பெண்களின் கண்ணியத்திற்கு எதிராகவும் 
குடும்பதலைவிகளின் இல்லறத்திற்கு எதிராகவும் பாதிப்பை ஏற்படுத்தி வரும்  இழிச்செயல்களுக்கு கொடி தூக்குவதற்கு பெயர் அல்ல மாதர்சங்கம் 
மாறாக அது மடமைச்சங்கம் என்று பெயர் மாற்றப்படுவதே பொருத்தமானது 

பெண்களின் நிகழ்காலம் சீரழிந்தது என்பது  கண்ணுக்கு முன் தெரிகிறது 
இனி எதிர்காலம் எந்தளவு பெண்களுக்கே வினையை அதிகப்படுத்தும் என்பது பகுத்தறிவுக்கும்  புரிகிறது 

இத்தகைய கேடுகெட்ட பெண்களின் செயல்களை கண்டித்தும் அவ்வாறு பேட்டிகள் நிகழ்சிகளை முன்னின்று நடத்தும் பெண்களை கண்டித்தும் ஒழுக்க வாழ்வில் ஈடுபடும் வாலிப பெண்களும் 
குடும்ப பெண்களும் களமிறங்க வேண்டும் 

ஒவ்வொரு ஊரிலும் இது போன்ற கழிசடை பெண்களை வலுவாக எதிர்க்க கற்றுக்கொள்ள வேண்டும்

காரணம் நாளைய தினம் நீங்கள் பெற்றெடுத்த 
பெண் பிள்ளைகளே இவர்களின் வலையில் வீழ்வார்கள்
வீழ்த்தப்படுவார்கள் 

இது நிச்சயம் இது சத்தியம் 


      நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                           31-12-2024

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை