அழைப்புப்பணி
அழைப்புப்பணியின் ஆணிவேர்
*******************
கட்டுரை எண் 1501
************
இஸ்லாத்தை அதன் தூய வடிவிலும் நளினம் தவறாத முறையிலும் எவருக்கும் எதற்காகவும் வலைந்து கொடுக்காத நிலையிலும் இயன்ற முறையில்
எத்தி வைப்பது முஸ்லிம்களின் மீது கடமை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை
எனினும் ஹிதாயத் என்று குறிப்பிடும் நேர்வழியை இறைவன் யாருக்கு நாடுகிறானோ அவர்களை தவிர வேறு எவருக்கும் அழைப்புப்பணி நிச்சயம்
பயனைத்தராது
இறைத்தூதர் நபி ஆதம் (அலை ) அவர்களின் அழைப்புப்பணி அவரின் ஒரு மகனுக்கு பயன் தரவில்லை
இறைத்தூதர் நபி நூஹ் (அலை ) அவர்களின் அழைப்புப்பணி அவர்களின் மனைவி மற்றும் மகனுக்கு பயன் தரவில்லை
இறைத்தூதர் நபி இப்ராஹீம் ( அலை)
அவர்களின் அழைப்புப்பணி அவரது தந்தைக்கு
பயன் தரவில்லை
இறைத்தூதர் நபி லூத் (அலை ) அவர்களின் அழைப்புப்பணி அவரது மனைவிக்கு
பயன் தரவில்லை
இறைத்தூதர் நபி மூஸா ( அலை) அவர்களின் அழைப்புப்பணி அவரது வளர்ப்பு தந்தைக்கு
பயன் தரவில்லை
இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களின் அழைப்புப்பணி அவர்களின் குடும்பம் மற்றும் கோத்திரம் சார்ந்த பலருக்கு பயன் தரவில்லை
காரணம் நேர்வழி என்பது ஒருவரின்
அறிவுத்திறமை
சாதனை
அழகிய அணுகுமுறை
எழுத்தாற்றல்
பேச்சாற்றல்
இவைகளையும் தாண்டி இறைவனின் நாட்டத்தின் படியே கிடைக்கக்கூடிய பெரும்பாக்கியமாகும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா நகரில்
பல தியாகங்களை செய்து இன்னல்களை இழப்புகளை சந்தித்தவைகளை கண்கூடாக பார்த்து அவர்களை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தை தழுவியவர்களை விட
பல மடங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற பிறகே மக்காவில் அதிகமாக இஸ்லாத்தை ஏற்றனர்
அப்படியானால் இறைத்தூதர்கள் செய்த அழைப்புப்பணிகளில் கோளாறு உள்ளதா
இறைத்தூதர்கள் செய்த அழைப்புணிகளில்
நளினம் தவறினார்களா
இறைத்தூதர்கள் செய்த அழைப்புப்பணிகளில்
வரம்பு மீறல்கள் இடம் பெற்றிருந்ததா
என்பதை உங்கள் சிந்தனையிடம் கேட்டுப்பாருங்கள்
அதிகார பலம்
உடல் பலம்
சிந்தனைத்திறன்
புகழ் உச்சம்
போன்ற எவைகளும் ஒரு மனிதனை நேர்வழியின் பக்கம் இழுப்பதற்கு பயன் தராது
இறைவனின் நேரடி தொடர்பில் இருந்து
இறைவனின் அனுமதியின் மூலம்
சில அற்புதங்களையும் நிகழ்த்திக்காட்டிய
நபிமார்களால் கூட அவர்கள் விரும்பிய எவர்களையும் நேர்வழியின் பக்கம் அழைத்து வர இயலவில்லை என்ற வரலாற்றுக்குறிப்புகளே திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் கற்பிக்கும் போதனைகளாகும்
இவைகளை உள்வாங்கி அழைப்புப்பணி செய்யும் முஸ்லிம்கள் தங்களை செவ்வைப்படுத்திக்
கொள்ள வேண்டும்
இத்தனை வருடம் அழைப்புப்பணி செய்தும்
நட்பு வட்டத்தில் இருந்தும்
குடும்ப உறவு இருந்தும்
எனது அழைப்புப்பணியை எவரும் செவியுறவில்லையே அல்லது படிக்க முன்வரவில்லையே என்ற விரக்தி தேவையற்றது
அழைப்புப்பணி செய்வது கூட்டத்தை சேர்த்துவதற்கு அல்ல மாறாக அழைப்புப்பணி செய்து நன்மைகளை ஈட்டி அதன் மூலம் மறுமையில் சுவன வாழ்வை அடைவதற்கே என்பதை உள்ளத்தில் ஆழமாக
பதிக்க வேண்டும்
இதுவே அழைப்புப்பணியின் ஆணிவேர்
மற்றும் லட்சியமாகும்
وَلَوْ اَنَّ قُرْاٰنًا سُيِّرَتْ بِهِ الْجِبَالُ اَوْ قُطِّعَتْ بِهِ الْاَرْضُ اَوْ كُلِّمَ بِهِ الْمَوْتٰى بَلْ لِّلّٰهِ الْاَمْرُ جَمِيْعًا اَفَلَمْ يَايْــٴَــسِ الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْ لَّوْ يَشَآءُ اللّٰهُ لَهَدَى النَّاسَ جَمِيْعًا
நிச்சயமாக குர்ஆன்
அதனைக் கொண்டு மலைகளை நகரும்படிச் செய்தாலும் அல்லது அதனைக் கொண்டு பூமியைத் துண்டு துண்டாக்கினாலும் அல்லது அதனைக் கொண்டு இறந்தவர்கள் பேசும்படிச் செய்யப்பட்டாலும்
(நிராகரிப்பாளர்கள் அழைப்புப்பணியை
ஏற்க மாட்டார்கள்)
ஆயினும் எல்லாக்காரியங்களும்
அல்லாஹ்வுக்கே உரியன
ஆகவே அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான் என்பதை ஈமான் கொண்டவர்கள் அறியவில்லையா?
(அல்குர்ஆன் : 13:31)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
10-12-2024
Comments
Post a Comment