நீதி அநீதி

         அநீதவான்களுக்கு எச்சரிக்கை
                   *****************

ஏழ்மை
அனாதை
கோழை
அந்நியன்
பணியாளன் 
வெளியூர்க்காரன்
என்பதற்காக எவருடைய  விவகாரங்களில் தலையிடும் போது 
நீதி அநீதியாக மாறுகிறதோ 
பேச்சு வார்த்தைகள் கண்ணியம் இழக்கிறதோ அவர்களே மறுமை நாளில் கடும் தண்டனை பெறுபவர்களில்  முதன்மையானவர்கள்

குறிப்பாக குர்ஆன்  சுன்னாவை மட்டும்
அடிப்படையாக ஏற்றவர்கள் நீதியில் தடுமாறும் போது அவர்களுக்கான தண்டனை இரட்டிப்பாக்கப்படுகிறது 

குடும்பத்திற்காக 
பதவிக்காக
பணத்திற்காக
இயக்கத்திற்காக
நட்புக்காக 
புறகாரணங்களுக்காக நீதியின் முதுகெழும்பை முறிப்பவர்கள் மறுமையில் நாதியற்றவர்களாய் தலைகுனியும் நிலையை 
நிச்சயம் சந்திப்பார்கள் 

அவர்களின் தொழுகையோ தானதர்மங்களோ 
இதர பணிகளோ அநீதியை நிலைநாட்டியதற்கு துணையாக வராது 

தொழாமல் தண்டனையை அனுபவிப்பவனை விட
நல்லொழுக்கம் பேணாதவன் தண்டனையை அனுபவிப்பதை விட
அவைகளை பேணுபவன் திரட்டிய நன்மைகளை நாசமாக்குவதே அறிவீனத்தின் உச்சம்

காலை கழிவுகளை அன்றாடம்
உடல் நீக்குவதை போல் 
பிற மனிதனின் உரிமைகளில்  அவசியமற்று  தலையிட்டு பாவக்கழிவுகளை சுமந்து கொண்டிருக்கிறோமா என்பதை 
ஒவ்வொரு முஸ்லிமும் சிந்தித்து தன்நிலையை மாற்றிட கடமைப்பட்டுள்ளான் 



இறைவனுக்கு மட்டும் நல்லவனாக 
காட்சி தந்தால் போதாது 
பிற மனிதர்களுக்கும் நல்லவனாக 
வாழ கற்றுக்கொள்ள வேண்டும்

பிறர் ஈமானை சுத்தப்படுத்துவது 
இரண்டாம் கடமையே
தன் ஈமானை சீர்ப்படுத்துவதே 
முதல் கடமை



مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ‏

கண்காணித்து எழுதக்கூடிய ( வானவர் )   அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் 
அவன் மொழிவதில்லை

(அல்குர்ஆன் : 50:18)

     நட்புடன் J . யாஸீன் இம்தாதி
                        1-12-2024

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை