Posts

Showing posts from March, 2025

தர்மசீலர்களை குறைத்து மதிப்பிடாதீர்

       தர்மசீலர்களை உதாசீதனம்                       செய்யாதீர்                **********************                  கட்டுரை எண் 1512                       ************* ரமலான் மாதத்தை முன்னிட்டு நன்மையை நாடி பகிரப்படும் தர்ம பொருட்களை பெறும் சிலர்  அதை வாங்கும் போது மலர்ந்த முகத்துடனும்  தர்மம் கொடுப்பவர் திரும்பிய பின் கொடுக்கப்பட்ட தர்மப்பொருளை அர்ப்பமாக பேசுவதையும் பரவலாக  காண முடிகிறது   பிறர் நலனில் அக்கரை கொண்டு கோரிக்கை வைக்காமலே  தர்மம் கொடுப்பவர்களின் மனதை காயப்படுத்துவது நன்றி கெட்ட செயலாகும்  500 ரூபாய் மதிப்புள்ள தர்மப்பொருளை மனமுவந்து  கொடுப்பவர்களை ஏளனமாக பேசுபவர்கள் அவர்களை போல் வாழ்நாளில் என்றாவது நாம் மனம் விரும்பி தர்மம் செய்துள்ளோமா என்று தனிமையில் சிந்திக்க வேண்டும்  தர்மம் செய்பவர்களின் எண்ணத்தை காண வேண்டுமே ...

படையல் பொருளை உண்ணலாமா

            படையல் பொருள்களை       முஸ்லிம்கள் அணுகும் முறையும்              தற்போதைய நிலையும்                 **********************                   ஆய்வுக்கட்டுரை                      பாகம் இரண்டு                         ***********       இறைவன் ஹலால் ஆக்கிய பொருட்களும்  உணவு வகைகளும்  முறையாக   கைவசம் வந்தால்  அதை பயன்படுத்தலாம் சாப்பிடலாம் என்பதற்கு பெரிய ஆய்வு தேவை இல்லை  காரணம் இறைவன் ஹலால் ஆக்கிய ஒன்றும்  ஹராம் ஆக்கிய ஒன்றும் முஸ்லிமின் வாழ்வில்  நிர்பந்தம் ஏற்பட்டாலே தவிர  எப்போதும் அதன் தன்னிலை சட்டத்தை இழக்காது ஆனால் இறைவன் அனுமதித்த பொருளும் உணவுகளும் இறைவன் அனுமதிக்காத ஒரு செயலை அரங்கேற்றுவதின் மூலம்  கைவசம் வந்தால் மார...

பள்ளிவாசல் நிர்வாகிகளும் ரமலானும்

  ரமலான் மாதமும் பள்ளிவாசல்                      நிர்வாகிகளும்            ************************ பள்ளிவாசல்களின் நிர்வாகிகள்  ஏனைய மாதங்களை விட ரமலான் மாதத்தில் அதிகமான பணிகளை சுமக்கும் நிலையில் உள்ளனர் என்பதை நடைமுறையில் காண முடியும் இரவுத்தொழுகைக்கு  ஹாபிளை  ஏற்பாடு செய்வது  தொடர் பயானுக்கு இமாம்களை  ஏற்பாடு செய்வது இப்தார் சஹ்ருக்கு ஏற்பாடு செய்வது ஏனைய மாதங்களை விட ரமலான் மாதத்தில் பள்ளிவாசல் பராமரிப்புக்கு ஏற்பாடு செய்வது  இன்னும் இது போன்ற சில பணிகள் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர் ரமலான் மாதத்தில் முஸ்லிம் சமூகம்  மகிழ்வாக இருப்பதற்கும் ஒரு வகையில் பள்ளிவாசல் நிர்வாகிகளும் காரணமாக உள்ளனர் பள்ளிவாசல் நிர்வாகிகள்  ஏன் அதை செய்யவில்லை  ஏன் இதை செய்யவில்லை என்று கடுமையாக  விமர்சனம் செய்வது சமுகத்திற்கு  எளிதானது  ஆனால் அவர்கள் செய்யும் பணிகளுக்கு தனது ஒத்துழைப்பு எந்தளவு  உள்ளது என்ப...