Posts

Showing posts from December, 2025

அவ்லியா தொடர் பாகம் இரண்டு

    மகான்களை மட்டப்படுத்தும்                ஞானசூனியங்கள்             *****************************     பாகம் இரண்டு கட்டுரை எண் 1542                     ***************** நல்லடியார்கள் மதிக்கத்தக்கவர்கள் இறையன்பை பெற்றவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை நல்லடியார்கள் என்பவர்கள் யார்   தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே நல்லடியார்களா   ? ஏன் உயிருடன் வாழும்  ஒரு நல்லடியாரையும் மகான் அவ்லியா  என்று முஸ்லிம்கள்  குறிப்பிடுவது இல்லை   ஏன் உயிருடன் வாழும்  ஒரு நல்லடியாரையும் முஸ்லிம்கள் தேடிச்சென்று நேர்சை செய்வது இல்லை  ஏன் உயிருடன் வாழும் ஒரு நல்லடியாரையும் தேடிச்சென்று பிரார்த்தனை செய்வது இல்லை ? ஏன் உயிருடன் வாழும் ஒரு நல்லடியாருக்காகவும் விழாக்கள் கொண்டாடுவது இல்லை  நல்லடியார்கள் என்றாலே தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது குர்ஆன் சுன்னாவில் குறிப்பிடப்பட...

அவ்லியா தொடர் பாகம் ஒன்று

                           அவ்லியா  தவறான புரிதல்களும் தெளிவான       புரிதல்களும் பாகம் ஒன்று             ****************************** அவ்லியா  என்ற அரபு பதத்திற்கு  நேசர்கள் என்ற பன்மை பொருள்  வலி என்ற பதத்திற்கு  நேசர் என்ற  ஒருமை பொருள்  அவ்லியா அல்லாஹ் என்றால்  அல்லாஹ்வின் நேசர்கள் என்று பொருள்  اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ  ‏ (விசுவாசிகளே!) அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்கள் அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள் (அல்குர்ஆன் : 10:62) அவ்லியா  ஷைத்தான் என்றால் சாத்தானின் நேசர்கள் என்று பொருள் اَلَّذِيْنَ اٰمَنُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌‌  وَالَّذِيْنَ كَفَرُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ الطَّاغُوْتِ  فَقَاتِلُوْۤا اَوْلِيَآءَ الشَّيْطٰنِ‌ اِنَّ كَيْدَ الشَّيْطٰنِ كَانَ ضَعِيْفًا‏ நம்பிக்கை க...

மகான்களை மட்டப்படுத்தும் ஞானசூனியங்கள்

     மகான்களை மட்டப்படுத்தும்                ஞானசூனியங்கள்             *****************************                கட்டுரை எண் 1540                     ***************** தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மகான்கள் அனைவரும் தூய இஸ்லாத்தை மக்களுக்கு எத்தி வைக்கவே தங்கள் ஊருக்கு வந்தார்கள் என்றே ஒவ்வொரு மகான்களைப்பற்றியும் கதைகள் சொல்லப்பட்டு வருகிறது   ஆனால் தர்ஹாக்களில் நடைபெற்று வரும்  சடங்குகளை வழிபாடுகளை பித்தலாட்டங்களை  கண்டால் மகான்கள் பெயரில் சொல்லப்படும் கதைகள் யாவும் அவர்களின் கற்பனையில் உருவாக்கப்பட்டவை என்றே கருத தோன்றுகிறது  காரணம் தர்ஹாக்களுக்கு செல்லும் எவரும் மகான்களின் மறுமை நன்மைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வது இல்லை  மாறாக மகான்களிடமே நேரடியாக கையேந்தி சஜ்தா எனும் சாஷ்டாங்கம்  செய்து அவர்களையும் குட்டி தெய்வங்களாகவே மாற்றி விட்டனர் பேய் பிசாசு ஓட்டு...

மனிதனின் சிந்தனைக்கு

        மனிதனின் சிந்தனைக்கு                  ********************* மரணம் என்ற ஒரு சொல் ஒரு மனிதனின் சகாப்தத்தை முடித்து விடுகிறது  உலகம் அஞ்சும் அதிகாரியாக உலகம் போற்றும் அறிவாளியாக உலகம் காண துடிக்கும் முகமாக உலகம் தூற்றும் தீயவனாக இருப்பினும் அவனது நினைவுகள்  குறுகிய நாளில்  மங்கி விடும்  அல்லது மறைந்து விடும் அல்லது மறைக்கப்பட்டு விடும் அல்லது திரிக்கப்பட்டு விடும்  உற்றார் உறவினர்களும்  என்றோ ஒரு நாள் நினைவு கூறும் வரிசையில் நிறுத்தப்பட்டு விடும்  எவருடைய இழப்பிற்கும் மரணத்திற்கும் பிரபஞ்சத்தின் செயல்பாடுகள் ஒரு நொடியும்  நின்றதும் இல்லை  தடுமாறியது இல்லை  காரணம் பிரபஞ்சம் வாழ்பவனுக்கு உரித்தானது  மரித்தவனுக்கு மாயமானது  உயிர் எங்கிருந்து வந்தது  எந்த நிமிடம் உடலில் நுழைந்தது  எந்த நிமிடம் உடலை விட்டுபிரிந்தது எந்த முறையில் பிரிந்தது  என்பதை துல்லியமாக கண்டறியும்  ஞானம் எவருக்கும் இல்லை  பிரபஞ்சத்தை உருவாக்கியவனே உயிர்களை செதுக்கியவன்...

இறைவனிடம் கையேந்துவோம்

      இறைவனிடம் கையேந்துங்கள்                         ****************** இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை  பொருமையுடன் கேட்டுப்பாருங்கள்  அவன் பொக்கிசத்தை மூடுவது இல்லை  EM நாகூர் ஹனீபா பாடிய பாடல்களில்  ஏகத்துவத்தை நிலை நாட்டும்  பாடல் இது  இப்பாடலை ரசனையோடு செவியுற்றவர்கள்  இதே கருத்தை குர்ஆன் சுன்னா ஆதாரங்களுடன் பறைசாற்றும் போது வழிகேடர்கள் என்று தூற்றுவது அறிவீனத்தின் உச்சம்  இறைவன் அல்லாத ஒருவரிடம் கையேந்தி பிரார்த்தனை செய்வதாக இருந்தாலும்  அல்லது ஒரு மகானின் பொருட்டால் இறைவனிடம்  கையேந்தி பிரார்த்தனை செய்வதாக இருந்தாலும்  இறைவனே  தனது பொக்கிசத்தை அடியார்களிடம்  மூடினாலோ அல்லது இறைவனிடம் கையேந்தும் அடியானிடம் இறைவன் தர இயலாது என்று மறுத்து கூறியிருந்தாலோ  பிறரிடம் கையேந்தும் நிலை ஏற்படலாம் என்பதே EM நாகூர் ஹனீபா பாடிய  இப்பாடலின்  மூல சாராம்சமாகும்  அவ்வகையில் குர்ஆன் சுன்னாவில் எங்குமே தனது அருள் பொக...