வெறுமை
வாழ்வில் வெறுமை ************** மனிதனுக்கு வறுமையை விட வலி மிகுந்தது வெறுமையாகும் ஆர்வத்துடன் செய்து வந்த வேலைகளை கூட ஆர்வம் இல்லாது செய்யும் சூழலையே வெறுமை என்று சொல்லப்படும் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இது போன்ற சில நிமிடங்கள் வந்து போகும் எதில் ஈடுபட்டாலும் அதில் ஓர் ஈர்ப்பு இருக்காது ருசியான பானங்களும் உணவுகளும் ருசியற்றதாக தோன்றும் கூட்டத்திற்கு இடையில் அமர்ந்திருந்தாலும் கண்கள் எதையோ உற்று நோக்கி கொண்டிருக்கும் சுற்று வட்டாரத்தில் கேட்கும் பேச்சுக்களும் அர்த்தமற்ற ஓசையாக செவியுறும் இந்நிலையில் இருந்து விடுபடாது விட்டால் இறுதியில் விரக்தி ஏற்படும் அந்த விரக்தியே மனிதனை மனநோயாளியாக மாற்றி விடும் இந்நிலையில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள இறைவனின் நினைவே உறுதுணையாக அமையும் காரணம் இவையாவும் மனிதனின் இதயத்துடன் தொடர்புடையதாகும் கீழ் காணும் குர்ஆன் வ...