Posts

WAQF

        வக்ஃபு திருத்த மசோதாவா                  திருட்டு மசோதாவா                  **********************                                பாகம் 3                                 ****** வக்ஃபு மசோதா திருத்தங்களை முஸ்லிம் சமூகம் ஒட்டு மொத்தமாக  எதிர்ப்பதாக ஒரு பிம்பத்தை சங்கிகள் சமூகவலைத்தளத்தில் தந்திரமாக பரப்பி வருகின்றனர் தவறுகள் இருக்கும் பட்சத்தில்  திருத்தங்களை எதிர்ப்பது என்பது அறிவீனர்களின் செயலாகும் வக்ஃபு வாரியம் உருவாக்கப்பட்ட 1954 வருடம் முதல் 2013 ஆண்டு வரை பல முறை  திருத்தங்கள் வக்ஃபு வாரிய நிபந்தனைகளில் மாற்றப்பட்டு உள்ளது  அப்போதெல்லாம் எந்த முஸ்லிம்களும் திருத்தங்களை எதிர்த்து போராடவில்லை  மாறாக திருத்தங்களை மனப்பூர்வமாக  வரவேற்றனர் தற்போது பீஜேபி அரசு தந்திரமாக கொண்டு வந்து...

விவாகரத்தை விபரீதமாக்காதீர்

       விவாகரத்தை விபரீதமாக்காதீர்               ************************                   கட்டுரை எண் 1515                          *************** மனமகிழ்வுக்காகவும் உறவுகளை மேம்படுத்தவும் சட்டப்பூர்வமாக செய்யப்படுவதே திருமணம்  கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்படும் மனக்கசப்புகளை நீக்குவதற்கு பல முயற்சிகளை செய்தும் இணைந்து வாழ விரும்பாத தம்பதியர்களை  ஊராருக்காகவும் குடும்பத்திற்காகவும் கணவன் மனைவியாக காட்சி தந்து  நிர்பந்தத்திற்காக அதிருப்தியோடு வாழும் நிலையை தொடர்ந்து ஏற்படுத்தாதீர்கள் தாய் தந்தை அண்ணண் தங்கை போன்ற இரத்த உறவுகளைப்போல் கணவன் மனைவி எனும் பந்தம் இயற்கையாகவே அமையும் பந்தம் அல்ல  மனம் விரும்பி இணைக்கப்படும்  இணைப்புபாலம் மட்டுமே திருமணம்   பாலத்தின் தூண்கள் உறுதியாக இருக்கும் வரையே அப்பாலத்தின் துணைகொண்டு இரு குடும்பத்தார்களும் மகிழ்வோடு நடமாடுவார்கள்  ஒருவரையொருவர் பலி வ...

வாழ்க்கையே அலை போலே

       வாழ்க்கையே அலை போலே                   ***************** அவரை திருமணம் செய்திருந்தால்  வாழ்வு சிறப்பாக அமைந்திருக்கும் இவரை திருமணம் செய்ததின் காரணமாகவே  வாழ்வு சீரழிந்து விட்டது என்ற கற்பனையே பலரின் குடும்ப வாழ்வை சீரழித்து வருகிறது ஒருவரை திருமணம் செய்யும் முன் பல முறை யோசிக்கலாம் அதற்கு இஸ்லாமும் தடை விதிக்கவில்லை  பலரின் அனுபவ பாடத்தை புறம் தள்ளி உபதேசங்களை உதறிதள்ளி விட்டு  உணர்ச்சிகளுக்கு மட்டும் இடமளித்து துணையை தேர்வு செய்பவர்கள் நிச்சயம் இந்நிலையை அடைவார்கள்  ஒரு மனிதனின் ஆசையும் தேடலும் எப்போதும் தனக்கு சாதகமாகவே கற்பனையில்  சிந்திக்க வைக்குமே  தவிர தனக்கு  பாதமாக சிந்திக்க வைக்க முனைவது இல்லை  பாமரன் முதல் படித்தவன் வரை  இதை வெல்வது சிரமமானது  அதை வென்று விட்டால் எதுவும் வாழ்வில் எளிமையானது  தூரத்தில் இருந்து பார்வையில் நிலவின் அழகை  ரசிக்கும் மனிதனை நிலவின் தரைப்பகுதியில் இறக்கி விட்டால் அவன் வாழ்ந்த பூமியை நோக்கியே மீண்டும் வர சிந்திப்...

தர்மசீலர்களை குறைத்து மதிப்பிடாதீர்

       தர்மசீலர்களை உதாசீதனம்                       செய்யாதீர்                **********************                  கட்டுரை எண் 1512                       ************* ரமலான் மாதத்தை முன்னிட்டு நன்மையை நாடி பகிரப்படும் தர்ம பொருட்களை பெறும் சிலர்  அதை வாங்கும் போது மலர்ந்த முகத்துடனும்  தர்மம் கொடுப்பவர் திரும்பிய பின் கொடுக்கப்பட்ட தர்மப்பொருளை அர்ப்பமாக பேசுவதையும் பரவலாக  காண முடிகிறது   பிறர் நலனில் அக்கரை கொண்டு கோரிக்கை வைக்காமலே  தர்மம் கொடுப்பவர்களின் மனதை காயப்படுத்துவது நன்றி கெட்ட செயலாகும்  500 ரூபாய் மதிப்புள்ள தர்மப்பொருளை மனமுவந்து  கொடுப்பவர்களை ஏளனமாக பேசுபவர்கள் அவர்களை போல் வாழ்நாளில் என்றாவது நாம் மனம் விரும்பி தர்மம் செய்துள்ளோமா என்று தனிமையில் சிந்திக்க வேண்டும்  தர்மம் செய்பவர்களின் எண்ணத்தை காண வேண்டுமே ...

படையல் பொருளை உண்ணலாமா

            படையல் பொருள்களை       முஸ்லிம்கள் அணுகும் முறையும்              தற்போதைய நிலையும்                 **********************                   ஆய்வுக்கட்டுரை                      பாகம் இரண்டு                         ***********       இறைவன் ஹலால் ஆக்கிய பொருட்களும்  உணவு வகைகளும்  முறையாக   கைவசம் வந்தால்  அதை பயன்படுத்தலாம் சாப்பிடலாம் என்பதற்கு பெரிய ஆய்வு தேவை இல்லை  காரணம் இறைவன் ஹலால் ஆக்கிய ஒன்றும்  ஹராம் ஆக்கிய ஒன்றும் முஸ்லிமின் வாழ்வில்  நிர்பந்தம் ஏற்பட்டாலே தவிர  எப்போதும் அதன் தன்னிலை சட்டத்தை இழக்காது ஆனால் இறைவன் அனுமதித்த பொருளும் உணவுகளும் இறைவன் அனுமதிக்காத ஒரு செயலை அரங்கேற்றுவதின் மூலம்  கைவசம் வந்தால் மார...

பள்ளிவாசல் நிர்வாகிகளும் ரமலானும்

  ரமலான் மாதமும் பள்ளிவாசல்                      நிர்வாகிகளும்            ************************ பள்ளிவாசல்களின் நிர்வாகிகள்  ஏனைய மாதங்களை விட ரமலான் மாதத்தில் அதிகமான பணிகளை சுமக்கும் நிலையில் உள்ளனர் என்பதை நடைமுறையில் காண முடியும் இரவுத்தொழுகைக்கு  ஹாபிளை  ஏற்பாடு செய்வது  தொடர் பயானுக்கு இமாம்களை  ஏற்பாடு செய்வது இப்தார் சஹ்ருக்கு ஏற்பாடு செய்வது ஏனைய மாதங்களை விட ரமலான் மாதத்தில் பள்ளிவாசல் பராமரிப்புக்கு ஏற்பாடு செய்வது  இன்னும் இது போன்ற சில பணிகள் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர் ரமலான் மாதத்தில் முஸ்லிம் சமூகம்  மகிழ்வாக இருப்பதற்கும் ஒரு வகையில் பள்ளிவாசல் நிர்வாகிகளும் காரணமாக உள்ளனர் பள்ளிவாசல் நிர்வாகிகள்  ஏன் அதை செய்யவில்லை  ஏன் இதை செய்யவில்லை என்று கடுமையாக  விமர்சனம் செய்வது சமுகத்திற்கு  எளிதானது  ஆனால் அவர்கள் செய்யும் பணிகளுக்கு தனது ஒத்துழைப்பு எந்தளவு  உள்ளது என்ப...

2025 ரமலான் பாகம் இரண்டு

      2025 ரமலான் மாதத்தின் தொடர்                   பாகம்  இரண்டு               ********************** இந்த நோய் இருந்தால்  நோன்பை தவிர்க்க  சலுகை உண்டா அந்த நோய் இருந்தால்  நோன்பை தவிர்க்க சலுகை உண்டா என்ற கேள்வி பரவலாக ரமலான் மாதத்தை முன்னிட்டு  கேட்கப்படுகிறது  நோய்கள் பல வகையானது அதில் குறிப்பிட்ட நோய்களை பட்டியல்  காட்டி நோன்பை தவிர்ப்பதற்கு இஸ்லாத்தில்  வழிகாட்டல் இல்லை  காரணம் எந்த நோயும் மனிதனின் உடல்நிலையை பொருத்து அதன் பாதிப்புகள் விளைவுகள் மாறுபடும்  நீரழிவு நோயை அனுபவிப்பவர்கள் அனைவரும்  ஒரே விதமான பாதிப்புகளை சமநிலையில் சந்திப்பார்கள் என்று உறுதியாக கூற இயலாது எந்த நோய் நோன்பு நோற்பதால் பாதிப்புகளை அதிகரித்து கொண்டே செல்லும் என்பதை நோயாளியால் தெளிவாக உணர முடிகிறதோ  அது எந்த நோயாக இருப்பினும் அவர்களை பொருத்தவரை மார்க்கத்தில் ரமலான் மாதத்தில் நோன்புகளை தவிர்ப்பதற்கு  சலுகையை பெறும் இதை உணர்ந்து செயல்படுவதே  ஒ...