Posts

அறிவீனர்களின் கதறல்களும் ஒப்பாரிகளும்

     அறிவீனர்களின் கதறல்களும்                      ஒப்பாரிகளும்             *****************************                கட்டுரை எண் 1548                     ***************** முறையான இறைநம்பிக்கை குடியிருக்கும் முஸ்லிமால் மட்டுமே ஒரு தவறை தவறு என்று முழு மனதுடன் ஏற்க முடியும்  முறையான இறைநம்பிக்கை இல்லாத எவராலும் ஒரு தவறை சிறு தவறாக சித்தரிக்கவும் முடியும் தவறே இல்லை என்று மடமையாக  மறுத்து மனமுரண்டாக வாதிக்கவும்  இயலும் இஸ்லாத்தை விமர்சிக்கும் எவரும்  இதுவரை அறிவுப்பூர்வமாகவோ அல்லது இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்றோ ஆதாரங்களுடன் உரியவர்களிடம் நிரூபித்ததும் இல்லை சவால்களை ஏற்றுக்கொண்டதும் இல்லை  முஸ்லிம் பெயர்தாங்கிகள் செய்யும்  அறிவீன செயல்களையும் வரம்பு மீறி நடக்கும் அவலங்களை மட்டுமே இஸ்லாமிய கருத்தாக அவர்களால் வஞ்சகமாக  சித்தரிக்க முடியும்...

அறிவும் அறிவியலும்

           அறிவும் அறிவியலும்      மார்க்கத்தை தீர்மானிக்காது             *************************** இஸ்லாம் எச்சரிக்கும்  வழிகேடுகளுக்கு பகுத்தறிவு  தீர்வு தராது  மாறாக குர்ஆன் சுன்னா அடிப்படை மட்டுமே தீர்வை தரும்  காரணம் பகுத்தறிவும்  அறிவியலும்   ஆன்மீக நம்பிக்கையை சரி காணாது  ருகூவில் ( குனிந்த நிலையில் இருக்கும்)  இமாம் ஜமாத்தை வேகமாக ஓடிச்சென்று அடைந்தால்  அந்த ரக்அத்தையும் தவறாது அடைய முடியும் என்று பகுத்தறிவு  குறிப்பிடும் ஆனால் அச்செயலை  நபிமொழி தவறு  என்று குறிப்பிடுகிறது  நோன்பு திறக்கும் நேரத்தை அடைந்து  விட்டாலும் சில விநாடிகள் பிற்படுத்தி  நோன்பு திறப்பதை பகுத்தறிவு பேணுதல் என்று  குறிப்பிடும்  ஆனால் அச்செயலை பாவம் என்று  நபிமொழி குறிப்பிடுகிறது  இது போல் பல உவமைகளை இஸ்லாமிய கண்ணோட்டத்தில்  எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம்  சுருக்கமாக குறிப்பிடுவதாக இருந்தால்  மறுமை வெற்றியை தீர்மான...

சிறந்த தந்தை

            சிறந்த தந்தை யார்  ?                   ****************** தனது சிரமத்தை தனது சந்ததிகளும்  சுமந்து விடக்கூடாது என்று ஆசைப்படுவது தகப்பனின் குற்றம் இல்லை  ஆனால்  சிரமம் என்றால் என்ன சிக்கல் என்றால் என்ன பொறுமை  என்றால் என்ன வீரம் என்றால் என்ன விவேகம் என்றால் என்ன  மன வலிமை என்றால் என்ன என்பதை நேரடியாகவோ  அல்லது தனது நடவடிக்கை மூலமாகவோ சந்நததிகளுக்கு கற்றுக்கொடுக்காது இருப்பதே தகப்பனாரின் குற்றம் இவைகளுக்கெல்லாம் ஆணிவேறாக அமைவது முறையான இறைநம்பிக்கை  இறைவனின் விதியில் இல்லாத ஒன்று எதுவும் நடவாது என்ற அஸ்த்திவாரத்தை சந்ததிகளின் உள்ளத்தில் சிறுவயதில் சீராக விதைத்து விட்டாலேஅவர்களின் மன உறுதியை   சரிந்து விட செய்யாது  தந்தை  இறந்து பல வருடம் சென்றாலும்  எனது தந்தையின் முயற்சியே இந்நிலைக்கு காரணம் என்று சந்ததிகள் தனிமையில் சிந்திக்கும் சூழலை உருவாக்கி செல்ல வேண்டும் نِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: كُنْتُ خَلْفَ النَّبِيِّؐ يَوْماً فَقَالَ: يَا غُلاَم...

அவ்லியா தொடர் ஆறு

  மகான்களை மட்டப்படுத்தும்                ஞானசூனியங்கள்             *****************************     பாகம் ஆறு .  கட்டுரை எண் 1546                     ***************** இறைத்தூதர் (ஸல்)  அவர்கள் காட்டிய வழியை முழு மனதுடன் வாழ்வில் யார் இயன்றவரை நடைமுறை படுத்துகிறார்களே  அவர்கள் அனைவரும் நல்லடியார்கள் மகான்கள் என்பதை பாமரன் புரிந்து கொள்ளும் விதம் அல்லாஹ் (ஜல்) குர்ஆனில் குறிப்பிடுகிறான்  قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ (நபியே!) நீர் கூறும் நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின் பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான் உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான் மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும்  மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான் (அல்குர்ஆன் : 3:31) இறைத்தூதரின் வழியை தூதரின் குடும்பத்தவர்கள் மட்டுமே முழுமையாக...

அவ்லியா தொடர் ஐந்து

       மகான்களை மட்டப்படுத்தும்                ஞானசூனியங்கள்             *****************************     பாகம் ஐந்து .  கட்டுரை எண் 1545                     ***************** ஒவ்வொரு ஊரிலும் கோயில்களை சுற்றி குலசாமிகள் குட்டி சாமிகள் உருவாக்கப்பட்டு மாற்று மதத்தவர்களால் சிறப்பித்து வழிபாடு செய்யப்படுவது  போல்  ஒவ்வொரு பகுதியிலும் மகான்களின் பெயரால் நல்லடியார்கள் பெயரால்  தர்ஹாக்கள் உருவாக்கப்பட்டு வழிபாடுகளும் குருட்டு நம்பிக்கைகளும் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது  சேவல் கோழியை அறுத்து பாத்திஹா ஓதும்  கணவாய் இப்ராஹீம்ஷா  தர்கா மதுரை சோழவந்தான் பகுதியில் உள்ளது  வழக்குகள் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும்  இந்த தர்காவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மகானுக்கு சேவல் கோழியை நேர்சை செய்து அறுத்து பலியிட்டு பிரார்த்தனை செய்தால்  தீர்வு கிடைப்பதாக தர்ஹாவில் ஓதிப்பார்க்கும் புரோகித...

அவ்லியா தொடர் பாகம் நான்கு

       மகான்களை மட்டப்படுத்தும்                ஞானசூனியங்கள்             *****************************     பாகம் நான்கு.  கட்டுரை எண் 1544                     ***************** இறை வசனங்களையும் இறைத்தூதர் போதனைகளையும் வாழ்நாளில் இயன்றவரை கடைபிடிப்பவர்களே  மகான்கள் மனிதன் என்ற முறையில் இயல்பாக ஏற்படும் தவறுகளில் இருந்தும் கூட அதிகமான முன்னெச்சரிக்கையை பின்பற்றுபவர்களே மகான்கள்  அத்தகையவர்கள் பெயரால் தர்ஹாக்களை உருவாக்கி வைத்து கொண்டு அவர்களின் சன்னதியில் தர்ஹா வியாபாரிகள் அரங்கேற்றம் செய்யும் ஒவ்வொரு அம்சங்களையும் இஸ்லாத்துடன் உரசினால் மகான்களை உண்மையில் இழிவுபடுத்தி  மட்டப்படுத்தக்கூடியவர்கள்  தர்ஹா நிர்வாகிகளும் மகான்களின்  துதி பாடுவதையே இஸ்லாமாக கருதும்  கூட்டத்தவர்களுமே ஆவர் செய்திகளை வாசிக்கும் தொலைக்காட்சிகள் ஊடகங்கள் யாவும் தர்ஹா பக்தர்கள் என்றும் தர்ஹா வழிபாடு துவங்கியது என்றும் அறிக்கை வாசிக...

அவ்லியா தொடர் பாகம் மூன்று

      மகான்களை மட்டப்படுத்தும்                ஞானசூனியங்கள்             *****************************     பாகம் மூன்று.  கட்டுரை எண் 1543                     ***************** மனிதன் என்ற முறையில் அனைவரும் சமம்  என்ற நிலையில் மனிதனை அடக்கம் செய்யும் இடத்தில் வேறுபாடு காட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை  நல்லடியார்கள் என்ற காரணத்தால் ஒரு மனிதனின் மண்ணறையை சுற்றி கட்டடம் எழுப்பலாம்   அல்லது தர்ஹா  எழுப்பலாம் என்றால்  பொது மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள லட்சக்கணக்கான முஸ்லிம்களில் எவரும்  நல்லடியார்கள் வரிசையில்  இடம் பெற மாட்டார்களா   ? தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் கையேந்தி பிரார்த்தனை செய்வது போல்  பொது மையவாடியில் அடக்கம் செய்யப்பட்ட முஸ்லிம்களிடம்  கையேந்தி பிரார்த்தனை செய்வது மட்டும் குற்றமாக பார்க்கப்படுமா? தர்ஹாக்களுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபடுவதை ஆத...