குடியுரிமை பிராத்தணை

      குடியுரிமை  திருத்த சட்டத்தை
           குழி தோண்டி புதைக்கும்
                    பிராத்தணை
             [][][][][][][][][][][][][][][][][]

          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
                     •••••••••••••••••
            கட்டுரை எண் 1310
                        ********
வெள்ளையனிடம் நான்கு முறை மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து

சுதந்திர போராட்ட தியாகிகளை காட்டி கொடுத்து

சுதந்திர இந்தியாவில் இருந்து முஸ்லிம்களை அடியோடு வெளியேற்ற வேண்டும்
அது முடியாத பட்சத்தில் அவர்களின் குடியுரிமையை பறித்து அகதிகளாக மாற்ற வேண்டும் என்று தவறான சித்தாந்தத்தை திணித்து அதை செயல்முறை படுத்தவே இந்து மகாசபை எனும் இயக்கத்தை உருவாக்கி

மதத்தை வைத்தே பிரிவினைக்கு வித்திட்டு கோழையாக வேடதிரியாக மடிந்த சாவர்க்கர் புகைப்படத்தை வணங்கி செல்லும் பிரதமரும்
உள் துறை அமைச்சரும் அவரது அடிச்சுவடில் கொண்டு வந்த குடியுருரிமை திருத்த சட்டம் முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்ற அமித்ஷாவின் போலியான வாக்குறுதியை அவர் சார்ந்த மக்களே ஏற்க மாட்டார்கள் நம்ப மாட்டார்கள்  எனும் போது

அடிமை இந்தியாவில் வெள்ளையனை விரட்டி அடிக்க சமூகத்தின் சதவிகித எண்ணிக்கையை விட கூடுதல் பங்களிப்பையும் தியாகத்தையும் செய்து சுதந்திர இந்தியாவை உருவாக்கி தந்த  பரம்பரையின் வாரிசுகளான  முஸ்லிம்களுக்கு சாவர்க்கரின் ஓர வஞ்சனை கோட்பாடை  ஜனநாயக ரீதியில் எதிர் கொள்வது பெரிய காரியமே அல்ல

காரணம் இந்திய  ஜனநாயகத்தின் சாசனத்தை மதித்து நடக்கும் சமுதாயமே முஸ்லிம்கள்

அசாமில் அகதியாக இருக்கும் பதினைந்து இலட்சம்  இந்து மக்களுக்கு குடியுரிமையை கொடுத்து அவர்களின் மூலம் ஓட்டுகளை  பொறுக்கி மீண்டும் இந்தியாவை சுரண்டி நாட்டை நாசத்திற்கு தள்ளும் சூழ்சியை நிச்சயம் நியாயவான்களின் துணையின் மூலமும் இறைவனின் அருளின் மூலமும் முறியடிக்க சளைக்காமல் பாடுபடுவோம்

இறைவனிடம் கண்ணீரோடு கையேந்தி பிராத்திக்கும் ஆயுதத்தை விட எங்களுக்கு உயர்ந்த ஆயுதம் இல்லை
மன்னாதி மன்னர்களை எல்லாம் மண்ணறையில் சாய்த்து தள்ளிய இறைவனுக்கு சாவர்க்கரின் தவறான சித்தாந்தத்தை தூக்கி சுற்றும் மதவாத சக்தியை மண்ணறையில் புதைப்பதற்கு ஒரு நொடி தேவையில்லை

وَلِلّٰهِ غَيْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ وَمَاۤ اَمْرُ السَّاعَةِ اِلَّا كَلَمْحِ الْبَصَرِ اَوْ هُوَ اَقْرَبُ‌ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 

மேலும் வானங்கள் மற்றும் பூமியின் மறைவான உண்மைகளைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறது மேலும் இறுதிநாள் நிகழ்வதற்கு அதிக நேரம் தேவையில்லை கண் சிமிட்டும் நேரம்

ஏன் அதைவிடவும் குறைந்த நேரம் போதுமானதாகும்
உண்மை யாதெனில் அல்லாஹ் அனைத்தையும் செய்வதற்குப் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான்

         (அல்குர்ஆன் : 16:77)

                    ************
தீய சக்தியை முறியடிக்க அன்றாடம் செய்ய வேண்டிய பிராத்தணை

اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ ، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

அல்லாஹும்ம இன்னா நஜ்அலுக்க ஃபீ நுஹூரிஹிம் வ நஊது பிக்க மின் ஷுரூரிஹிம்

பொருள் : யா அல்லாஹ் அவர்களுக்கு எதிரில் உன்னை ஆக்குகிறோம்
அவர்களின் தீமைகளை விட்டு உன்னிடம் பாதுகாப்ப தேடுகிறோம்

         ஆதாரம் : அபூதாவூத்

اللَّهُمَّ أَنْتَ عَضُدِي ، وَأَنْتَ نَصِيرِي ، بِكَ أَجُولُ وَبِكَ أَصُولُ وَبِكَ أُقَاتِلُ

அல்லாஹும்ம அன்த்த அளுதி வ அன்த்த நஸீரி பிக அஜுலு வபிக அசூலு வ பிக உகாதிலு

பொருள் : யா அல்லாஹ்!
நீயே எனக்கு பக்கபலம்
நீயே எனக்கு உதவி செய்பவன்
உன் உதவி கொண்டே தாக்குதல் தொடுக்கிறேன்
உனது உதவி கொண்டே (எதிரிகளுடன்) போராடுகிறேன்

    ஆதாரம் : அபூதாவூத், திர்மீதி

            நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்