பீஜேபி ராஜா

        பீஜேபி ஹெச். ராஜா வின்

                    அறிவீனம்

    <<<<<<•••••••••••••••••••••>>>>>>
        20-01-18- சனிக்கிழமை
              **************


ஒரு மதத்தை சார்ந்தவர் அம்மதம் சார்ந்த ஒன்றை விமர்சனம் செய்தால் அம்மதம் சார்ந்த மதகுருக்களும் அவர்களை சார்ந்த  சமுதாய தலைவர்களும் தான் அந்த விமர்சனத்தை பற்றி விளக்கம் சொல்ல வேண்டும்

அவ்வாறு அது போன்ற விமர்சனத்திற்க்கு பதில் சொல்ல தெரியவில்லையானால் அந்த  கருத்தை ஆமோதித்து இனி இதை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று முறையாக  அறிவிப்பை கொடுக்க வேண்டும்


அந்த அறிவிப்பையும் மீறி  நடந்தால் சம்மந்தப்பட்ட நபர் மீது இந்திய  அரசியல் சாசன பிரகாரம் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தின் மூலம் விவகாரங்களுக்கு  தீர்வு தேட வேண்டும்

இந்த பொதுவான  ஞானமும் கூட இல்லாத ஒருவர் தான் தமிழகத்தின் பீஜேபி கட்சியை சார்ந்த ஹெச் ராஜா என்ற ஓர் அறிவிலி

கவிஞர் வைரமுத்துவை கண்டிக்கிறேன் எனும் பெயரில் பொது கூட்டத்தில் நின்று கொண்டு

கவிஞர் வைரமுத்து என்பவன் தேவடியாள் மகன் தேவடியாளுக்கு பிறந்தவன் தான் இந்து மதத்தை விமர்சிப்பான் என்றெல்லாம் குடிகாரனை விட கேடு கெட்ட நிலையில் வார்த்தைகளை பயன் படுத்தி பேசிய நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் வீடியோவாக பரவலாக காண முடிகின்றது

ஒரு மதத்தை பிரச்சாரம் செய்யும் ஒருவர் அல்லது அந்த மதத்தில் பக்தியோடு இருக்கும் ஒருவர் அம்மதம் சார்ந்த ஒருவராலே அம்மதம் சார்ந்த விசயங்கள் விமர்சிக்கப்படும் போது அதற்க்கு  முறையாக இந்து மத நூல்களின் சான்றுகளோடு  பதில் சொல்ல பழக வேண்டும்

அதற்க்கு பதில் சொல்ல தெரியவில்லையானால் வாய் மூடி மவுனமாக இருக்க வேண்டும்

அதற்க்கு மாற்றமாக சம்மந்தமே இல்லாது கோபப்படுவது அறிவிலிகளின் குணாதிசயம்

பீஜேபி யை சார்ந்த ராஜா என்பவர் தமிழகத்தில் இவ்விசயத்தில் அறிவிலிகளுக்கு முன்னோடியாக இருப்பவர்

         ++++++++++++++++++

மேலும் வைரமுத்துவுக்கு பதில் சொல்கிறேன் எனும் பெயரில்

வைரமுத்துவே நீ இது போல் நபிகள் நாயகத்தையும் அவருடைய மனைவிகளையும் விமர்சிக்க முடியுமா என்று கேனத்தனமாக எதிர் கேள்விகளையும் தொடுத்துள்ளார்

கவிஞர் வைரமுத்துவுக்கும் நபிகள் நாயகத்துக்கும் என்ன சம்மந்தம்  ?

இந்து மதத்தை சார்ந்த ஆண்டாள் என்பவரை விமர்சித்து பொது மேடையில் பேசியது முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்தவர்களா அல்லது இந்து மதத்தை சார்ந்த கவிஞர் வைரமுத்துவா  ?

அல்லது பீஜேபி அரைவேக்காடு ராஜா அவர்கள் நபிகள் நாயகத்தை பற்றி தனது சொல்லில் உளரியதின் மீது  அவருக்கே முழு நம்பிக்கை இருந்தால்

பிரமாண்டமாக மக்களை அழைத்து நபிகள் நாயகத்தின் தூய வாழ்கையை பற்றியும் அவர் இந்த உலகத்திற்க்கு சொன்ன கொள்கையை பற்றியும் விவாதிக்க எற்பாடு செய்யட்டும்


அந்த அழைப்பை எற்று   நபிகளாரின் தூய வாழ்வை துல்லியமாக ஆதாரப்பூர்வமாக நிலைநாட்ட  ஆயிரமாயிறம் இஸ்லா
மிய அறிஞர்கள் தயார்  என்பதையும்

கவிஞர் வைரமுத்து கூறிய ஆண்டாளை பற்றியும்

எந்த கொள்கையை பீஜேபி ராஜா தூக்கி பிடிக்கிறாரோ அந்த கொள்கை தான் மனித நேயத்தை குழி தோண்டி புதைக்கும் கொள்கை என்பதையும்

பெண் அடிமை தனத்தை ஊக்குவிக்கும் கொள்கை என்பதையும்

நடைமுறைக்கே உதவாத கொள்கை என்பதையும்

அசிங்கத்தையும் ஆபாசத்தையும் ஊக்குவிக்கும் கொள்கை என்பதையும்

ஜாதி இன வேற்றுமைகளுக்கே தூபம் போட்ட கொள்கை என்பதையும்

தக்க சான்றுகளோடு நிரூபிக்க தயார் என்பதையும் இதன் மூலம் தெரியப்படுத்தி கொள்கிறோம்

       நட்புடன் இம்தாதி



Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்