மென்மை கவி
என் சிந்தனையில் உதித்தவை
வடிவம் - ஜே.யாஸீன் இம்தாதி
======================
03-11-17- வெள்ளி
****************
1-பாடங்களை நடத்துவோருக்கு அவசியமற்ற கோபங்கள் இருந்தால் அவர்களின் பாடங்கள் கூட பயனில்லாத உழுத்த பாலங்களாகவே அமையும்
2-பணிவுகளை அடிமைகளாக கருதும் மனிதன் சமூக பார்வையில் பல கீழ்நிலை குனிவுகளையே எதிர் கொள்வான்
3-இடத்திற்க்கு ஏற்ற விதை போடாதவனும் நபருக்கு ஏற்ற நடை போடாதவனும் அதன் விளைச்சலில் ஏமாற்றத்தையே அடைவான்
4- துணை தேர்வில் சீதனத்துக்கு மட்டுமே முதலிடம் தருபவன் அவன் மனை தேர்வில் பொட்டல் வழியை தேர்வு செய்தவன் போலாவான்
5- உண்மைகள் உறங்கும் போது தீமைகள் துள்ளி குதிக்கும் நன்மைகள் வீருகொண்டு எழுந்தால் தீமைகளே தள்ளாடி துடிக்கும்
6-கஷ்டங்களை இஷ்டங்களை போல் கருதி பழகினால் துஷ்டங்கள் கூட உனை கண்டு தூரமாகும்
ஆனால் உன் வாழ்வின் சிறு நஷ்டங்களையே கஷ்டங்களாக கருதினால் மன நோயே அதன் மைத்துனன் ஆகும்
7- விழுதுகளை வீழ்ந்து தினம் கவனித்தால் விருதுகளை கூட நீ பெறலாம்
ஆனால் வாழ்கை சரிவுகளை நீ சுமையாய் சுமந்தால் உன் குறுதிகள் கூட வலுவிழந்து போகும்
8- ஆட்டங்களையே தேட்டங்களாக நீ தேடினால் உன் மன ஓட்டங்களும் ஊனமாகிப் போகும்
உன் வாட்டங்களையே ஏணி படியாக நீ அமைத்தால் அதுவே உனை ஒய்யாரம் கொண்டு போகும்
9-திருத்தங்கள் இல்லாத வருத்தங்கள் நடிகனுக்கு இணையான பாத்திரங்களே !! நடிப்பு சாயம் வெளுத்தால் சாதா மனிதனே
10- மொழிகளால் கைது செய்பவன் திறமைசாலி தன் விழிகளால் கைது செய்பவள் சல்லாபக்காரி
11- ஏற்றம் இல்லா வணிகமும் மாற்றம் இல்லா வாழ்கையும் இனிக்காது
12-பாசமானவர்களிடம் வேஷம் கலையும் போது தான் மன உருத்தலின் வேதனையே கிளை துளிர துவங்கும் அதுவே உன் தவறுக்கான தண்டனை
தண்டனைகள் திருந்துவதற்கே தவிர அதை நினைத்தே வாழ் நாள் முழுவதும் வருந்துவதற்க்கு அல்ல
13-உன் கால்கள் உன்னோடு இருக்கும் வரை சாதா கை தடியின் அருமை கூட உனக்கு புரியாது !!
ஆனால் கை தடியின் துணை தான் இனி உனக்கு என்றால் அப்போது தான் புரியும் உன் காலின் மகிமை என்ன என்று ?
14- இருப்பதை உன் கரங்களால் தொட்டு பார் இல்லாததை உன் கற்பனையால் தொடாதே !! கானல் நீரும் இயலா கற்பனை குணமும் ஒன்றே
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment