கஃபதுல்லாவும் கருப்பு திரையும்

  கஃபதுல்லாவும் கருப்பு திரையும்

         வரலாற்று சான்றுகள்

      *******************************
    14-01-17-- J. யாஸீன் இம்தாதி
           -----------------------------------
            " கட்டுரை எண் 1063

      Bismillahir Rahmanir Raheem
           ====================

கஃபதுல்லாஹ் என்று  சொன்னவுடன அதன் மீது போர்த்தப்பட்டுள்ள கருப்பு நிற போர்வையோடு தான் அந்த கட்டிடத்தின் வடிவம் நமக்கு தெரியும்

ஆனால் அந்த போர்வையின் பின்னனி பலர்களுக்கு தெரியாது

கிஸ்வா என்ற இந்த ஒரு போர்வை தயாரிக்க இந்திய ருபாய் 20 கோடி அளவிற்க்கு ஒவ்வொரு வருடமும் எந்த விதமான தயக்கமும் இல்லாது  தற்காலத்தில் செலவு செய்யப்படுகிறது 

24 கிலோ தங்கத்தை கொண்டும் 96 கிலோ வெள்ளியை கொண்டும் இந்த போர்வை  தயாரிக்கப்படுகிறது

மொத்தம் 120 கிலோ தங்கமும் வெள்ளியும் 1க்கு 4 விகிதத்தில் கலந்த இழைகளால் திருகுர்ஆன் வசனங்கள் மிக நுட்பமான முறையில் கிஸ்வா எனும் இந்த போர்வையில்
பின்னப் படுகின்றன

கிஸ்வா என்ற இந்த ஒரு போர்வையின் மொத்த எடை 790 கிலோவாகும்

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள்  காலத்திலேயே எழுப்பப்பட்டுள்ள முதல் பள்ளிவாசலாக இது இருந்தாலும்  இந்த கருநிற போர்வை போர்த்தும் வழக்கத்தை நபி ஆதம் (அலை)அவர்களோ அல்லது அவர்களை பின் தொடர்ந்து வந்த நபி இப்ராஹீம் (அலை) அவர்களோ உருவாக்கவில்லை

ஆனால் நபி( ஸல்) அவர்களின் பிறப்பிற்க்கு முன்பிருந்தே இந்த போர்வை போர்த்தும் வழக்கம் பல காலமாக கஃபாவை நிர்மாணிக்கும் அரபுக்களிடம்  இருந்து வருகின்றது

            ++--------------------------++
  கருப்பு போர்வை பழக்கம் வந்தது
                        எப்படி ?
                     !-----------------!

ஹிஜிரி 210 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு 170 ஆண்டுகளுக்கு முன்னால்  யமன் நாட்டை ஆண்ட ஹுமைரி என்ற மன்னன் மக்கா வந்தார்

அப்போது மக்காவிலுள்ள மக்கள் அந்த மன்னனுக்கு உரிய மரியாதை செய்யவில்லை அதனால் ஆத்திரம் அடைந்தான் யமன் நாட்டு மன்னன் ஹுமைரி

எனவே கஃபாவை இடித்துத் தள்ள எண்ணினான் மன்னன் ஹுமைரி இவ்வாறு எண்ணிய அந்த நேரத்தில் கடுமையான நோய் ஏற்பட்டு உடல் நிலை பாதிப்புகளுக்குள்ளனான் மன்னன் ஹுமைரி

இந்த நிலையில் மன்னனின் பாதிப்பு நீங்குவதற்க்கு  அரசவை மந்திரி பிரதானிகள் உம்ரா செய்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரும்படி ஆலோசனை கூறினார்கள்

அவர்களின் ஆலோசனையின்படி உம்ரா செய்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டார் யமன் நாட்டு மன்னன் ஹுமைரி

அல்லாஹ்வின் அருளால் நோய் நீங்கியது இந்த நிலையில் உடல் நலத்தை நல்கிய அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் நோக்குடன் தான் மன்னன் ஹுமைரி  கிஸ்வா எனும் போர்வையை போர்த்தியுள்ளார் இதுதான் கஅபாவில் போர்த்தப்பட்ட முதல் போர்வை  கிஸ்வா இந்த போர்வை - கிஸ்வா உலர்ந்த பனை ஓலையாலும் நூலாலும் நெய்யப்பட்டதாக இருந்துள்ளது

கஅபாவில் போர்த்தப்பட்ட இரண்டாவது கிஸ்வா

இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சிறுவராக இருந்தபொழுது கஅபாவை போர்த்தி இருந்த திரையை சாம்பிராணிப் புகையால் வாசைன ஊட்டும் வழக்கம் மக்காவில் இருந்தது திடீரென சுழன்றடித்த சூறாவளியினால் சாம்பிராணி சட்டியின் நெருப்புக் கங்குகள் கஅபாவின் திரையில் பட்டு தீப்பற்றி எரிந்து விட்டது

இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பிறகு ஹஜ் செய்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம். அந்த ஹஜ்ஜின் போது யமன் நாட்டவர்கள் கோடிட்ட கிஸ்வாவை கொண்டு வந்தார்கள். அந்த கிஸ்வாவை கஅபா மீது போர்த்தினார்கள். இது கஅபாவில் போர்த்தப்பட்ட இரண்டாவது கிஸ்வா

ஹிஜிரி 13இல் எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட கிஸ்வாவை இரண்டாம் கலீபா உமர்(ரலி) அவர்கள் அணிவித்தார்கள் இது கஅபாவில் போர்த்தப்பட்ட மூன்றாவது கிஸ்வா

ஆண்டுக்கு இருமுறை கிஸ்வா அணிவிக்கும் வழக்கம்

மூன்றாம் கலீபா உஸ்மான்(ரலி) அவர்கள் ஆட்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் ரமழான் மாதம் 27அன்றும் துல்ஹஜ் மாதம் ஹஜ்ஜுக்கு முன்னரும் என ஆண்டுக்கு இருமுறை கிஸ்வா அணிவிக்கும் வழக்கம் வந்தது

கலீபா முஆவியா(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில். ரமழான் மாதக் கடைசியிலும் முஹர்ரம் 10-ம் நாள் அன்றும் கஃபாவுக்கு கிஸ்வாவை போர்த்தலனார்கள். ரமழான் மாதத்தில் போர்த்த கபாத்தி என்ற கட்டித் துணியிலும் முஹர்ரம் மாதத்தில் போர்த்த பட்டுத்துணியிலும் கிஸ்வாவை தயாரித்தார்கள்
                  !---------------------!

     கிஸ்வாக்களில் "லாயிலாஹ
                 இல்லல்லாஹ்

ஓரிறைக் கொள்கைக் கலிமாவான லாயிலாஹ இல்லல்லாஹ்' இல்லை கடவுள் அல்லாஹ்வைத் தவிர

வணக்கத்துக்கு உரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் எதுவும் இல்லை என்ற வார்த்தை கலீபா முஆவியா(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில்தான் கிஸ்வாக்களில் இடம் பெறச் செய்யப்பட்டது

காலப் போக்கில் ஏற்கனவே அணிவிக்கப்பட்டிருந்த கிஸ்வாவை அகற்றாமலேயே அதன் மீது மீண்டும் புதிய கிஸ்வாக்களை அணிவித்து வந்தனர்

இதனால் கஃபாவின் மீது மிகப் பெரும் பளு சேர்ந்தது இதனால் ஹிஜ்ரி 160இல் கலீபா அல்மஹ்தீ அல் அப்பாஸி பழைய கிஸ்வாக்களை அகற்றி விட உத்தரவிட்டார்

வெள்ளை, சிகப்பு, பச்சை ஆகிய நிறங்களில் தான் ஆரம்ப காலங்களில் கிஸ்வாக்கள் போர்த்தப்பட்டு வந்தன

                        !!!-----------!!!

             கறுப்பு நிற கிஸ்வா

கலீபா அல் நாஸிருல் அப்பாஸி காலத்தில் ஹிஜ்ரி 575 இல் தான் முதன் முதலில் கிஸ்வாவுக்கு கறுப்பு நிறம் பயன்படுத்தப்பட்டது. அதுதான் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

      
ஹிஜ்ரி 743ஆம் ஆண்டு எகிப்தை ஆண்ட சுல்தான் கலாவூன் கிஸ்வா தயாரிப்பிற்காகவும் கஃபாவின் பராமரிப்புக்காகவும் எகிப்து நாட்டில் உள்ள மூன்று விவசாய கிராமங்களின் வருமானத்தை அன்பளிப்பாக வழங்கினார்

சுல்தான் கலாவூன் அவர்களின் ஆட்சிக்கு 300 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த உஸ்மானிய சுல்தான் சுலைமான் மேலும் ஏழு கிராமங்களின் வருமானங்களை வழங்கினார் அப்போது கஃபாவுடன் மதீனாவும் பராமரிப்பில் சேர்க்கப்பட்டது

                    !!------------------!

இவ்வாறு பல நூறு ஆண்டுகளாக கிஸ்வாக்கள் எகிப்தில் தயாரிகப்பட்டு மக்காவுக்கு கொண்டு வரப்பட்டன கிஸ்வாக்களை கொண்டு வர 15-க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் பயன் படுத்தப்பட்டன

கிஸ்வாக்களை சுமந்து கொண்டு வரும் ஒட்டகங்களை மக்கா வாசிகள் வரவேற்பார்கள்

'மஹ்மல்' என்று அழைக்கப்படும் அழகிய பல்லாக்குகளை ஒட்டகங்கள் மேல் வைத்து அவைகளில் கிஸ்வாவின் பகுதிகளை கொண்டு வருவர். கிஸ்வாக்களை சுமந்து கொண்டு 15-க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் செல்லும்போது பார்ப்பதற்கு ஊர்வலம் போல் காட்சிகள் இருக்கும் இந்த ஊர்வலம் புறப்படும் போது எகிப்தே விழாக்கோலம் பூண்டு விடும் கிஸ்வாக்களை சுமந்து கொண்டு வரும் ஒட்டகங்கள் மக்கா வந்தடையும்போது இசைத் தாளங்களுடன் ஆடிப்பாடி மக்கா வாசிகள் கிஸ்வாக்களை சுமந்து கொண்டு வரும் ஒட்டகங்களை வரவேற்பார்கள்

இந்த சூழலில் கிஸ்வா அனுப்புவதை எகிப்து அரசு நிறுத்திக் கொண்டது

ஹிஜ்ரி 1343  ஆண்டு  சவூதியை ஆண்ட மன்னர் அப்துல் அஸீஸ் இப்னு ஸுவூது அவர்கள் இதனை கண்டித்தார்கள் ஆடிப்பாடிக் கிஸ்வாவை கொண்டு வரும் நிகழ்ச்சி இஸ்லாத்திற்கு முரணானது என்று சுட்டிக் காட்டி கண்டித்தார்கள் அதனால் மினாவில் வைத்து எகிப்தியர்களுடன் மோதல் ஏற்பட்டது அடுத்த ஆண்டு முதல் கிஸ்வா அனுப்புவதை எகிப்து அரசு நிறுத்தி விடுவதாக அறிவித்தது. அது போல் கிஸ்வா அனுப்புவதை எகிப்து அரசு நிறுத்திக் கொண்டது

            !!------------------------------!!

        இந்தியாவும் கிஸ்வாவும்

ஹிஜ்ரி 1343 மன்னர் அப்துல் அஸீஸ் அவர்கள் இந்தியாவிலிருந்து கை தேர்ந்த நெசவுத் தொழிலாளிகளை சவூதிக்கு கொண்டு வந்தார்  கிஸ்வா தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார்

ஹிஜ்ரி 1344, 45 ஆகிய இரு ஆண்டுகள் கஅபாவுக்கு புதிய கிஸ்வாக்கள் போர்த்தப்படவில்லை இந்திய தொழிலாளிகளைக் கொண்டு சவூதி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் சவூதி கிஸ்வா ஹிஜ்ரி 1346 ஆம் ஆண்டுதான் தயாராக ஆனது இந்தியர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் கிஸ்வா ஹிஜ்ரி 1346 ஆம் ஆண்டு  போர்த்தப்பட்டது இப்படி பத்து ஆண்டுகள் நடந்தது

எகிப்து மீண்டும் கிஸ்வாவை அனுப்பும் உரிமையப் பெற்றது

ஹிஜிரி 1370 இல் உலக அளவில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது அதன் பயனாக எகிப்து மீண்டும் கிஸ்வாவை அனுப்பும் உரிமைய சவூதியிடமிருந்து பெற்றது இது ஹிஜிரி 1382 வரை தொடர்ந்தது திறந்தவெளி ஹோட்டல்களிலும் மேடைகளிலும் ஆடிப் பாடும் பிரபல எகிப்து பாடகிதான் உம்மு குல்ஸும் என்ற பெண்  இந்த பெண்ணின் நன்கொடையையும் கிஸ்வாவை தயாரிக்க எகிப்து அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு எகிப்து கிஸ்வாவுக்கு சவூதியில் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது

அதன் பின் இன்று வரை கிஸ்வா என்ற கருப்பு போர்வை முழு விபரங்களை சவுதி அரசாங்கம் ரகசியமாக காத்து வருகின்றது

இது கஃபா தொடர்பான சில நூல்களில் இருந்து சில அறிஞர்களின் ஆலோசனையோடு எழுதப்பட்ட தொகுப்பு ஆகும்  இதை படிப்பதோடு பாதுகாத்து வைப்பது பின் வரும் சமூகத்திற்க்கு பலன் அளிக்கும்

                நட்புடன் . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்